குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உக்ரைனில் திருப்பம்: ரசியாவுடன் இணைகிறது கிரீமியா! 16-ந் தேதி பொதுவாக்கெடுப்பு!!

06.03.2014-உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியா ரசியாவுடன் ஓர் மாகாணமாக இணைய திடீர் முடிவு செய்துள்ளது. ரசியாவுடன் இணைப்பது குறித்து வரும் 16-ந் தேதி வாக்கெடுப்பு நடத்த கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச். இதனால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் ரசியாவில் அடைக்கலமானார். இதையடுத்து உக்ரைனில் புதிய அரசு அமைந்தது. ஆனால் ரஷியாவோ உக்ரைனின் கிரீமியா என்ற சுயாட்சி பிராந்தியத்தை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச மோதலாக உருவெடுத்தது. கிரீமியா மீதான தமது மேலாதிக்கத்தை ரசியா விட்டுக் கொடுப்பதாக இல்லை.

ஆனால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ரசியாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு போர்மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் புதிய திருப்பமாக கிரீமியா நாடாளுமன்றத்தில் ரஷியாவுடன் இணைவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் இன்று அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ரசியர்கள் அதிகம் வாழும் கிரீமியா தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. என்னதான் பொதுவாக்கெடுப்பு நடத்துகிறோம் என்று ‘நடைமுறை’ப்படி அறிவித்தாலும் ரஷியாவின் நெருக்கதல் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.