குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரச்யா!

27.02.2014-உக்ரைன் நாட்டின் சனாதிபதியாக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்கள் திடீரென பாராளுமன்றத்தை கைப்பற்றினர்.

சனாதிபதியை பதவி நீக்கம் செய்ததுடன் மே மாதம் 25ம் திகதி தேர்தல் நடத்தவும் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.

 

பதவி இறக்கப்பட்ட விக்டர் யானுகோவிச் ரச்யாவின் ஆதரவாளர். ஆகவே, அவரை காப்பாற்ற ரச்யா ராணுவத்தை அனுப்பலாம் என்று ஒரு யூகம் பரவுகிறது.

 

ஆனால் ராணுவத்தை அனுப்பி உக்ரைன் விவகாரத்தில் தலையிடக் கூடாது என அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

உக்ரைனில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட பதட்டத்துக்கு மத்தியில், ரச்ய சனாதிபதி  விளாதிமிர் புட்டின் ரச்ய ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்கெய் சொய்கு வெளியிட்டுள்ள தொலைக்காட்சி செய்தியில்,

 

நாட்டின் ராணுவ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மிகப்பெரிய அளவில் பயிற்சியில் ஈடுபட புதின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உயர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

முதல் இரண்டு நாட்கள் ராணுவம் உஷார்படுத்தப்படுவதுடன், துப்பாக்கி சூடு பயிற்சியும் நடைபெறும். வெள்ளிக்கிழமை முதல் முழுமையான போர் ஒத்திகை நடைபெறும்.

 

பால்டிக் கடலில் கப்பற்படை ஒத்திகையும், விமானப்படை ஒத்திகையும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.