சிவசங்கர் மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் ஓரிரு தினங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது. வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.
இதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றி வந்த எம்.கே. நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்கென பாதுகாப்பு ஆலோசகர் பதவி கடந்த 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஜே.என். தீட்ஷித் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
அணுசக்தி ஆளுமை ஆணையத்தின் செயல்பாட்டுக் குழுவி்ன் தலைவராக செயல்படுவதும் பாதுகாப்பு ஆலோசகரின் முக்கியப் பணிகளில் ஒன்று.