உலகின் மிகப் பெரிய விமானமாகக் கருதப்படும் எயர்பஸ் ஏ380 விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர கோல்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விமானத்தை பார்வையிட 20,000 பேர் விமான நிலையத்தில் குழுமியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த விமானத்தை எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு சூரிச் விமான நிலையத்தில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த விமானத்தில் ஒரே நேரத்தில் 853 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.