இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.
சீனாவின் செயல்பாடுகளை அடுத்து அதை எதிர்கொள்ள நாமும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார். தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். சீனா இந்த பிராந்தியத்தின் வல்லரசாக உருவாகி வருவது உண்மைதான். அதன் பிரதிபலிப்பாக அந்நாட்டின் நடவடிக்கைகளும் உள்ளன. சீனாவின் நடவடிக்கைகள் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நாம் உணரும் நிலையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.பாதுகாப்பு அடிப்படையில் இந்தியப் பெருங்கடலில் சீனா சில நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்தான். எனவே சந்தேகத்தின் பலனை வழங்கி சீனாவின் செயலை பகையாக கருத வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.