கள்ளிப்பாலை நுள்ளிப்பார்த்தேன் பெண்குழந்தைகளின் இரத்தம்வந்தது!
எங்களை உலகில் வாழவிடுங்கள் உங்களைப்பெற்றவளும்
எங்களைப்போன்ற பெண் தெய்வம் என்ற சத்தம் வந்தது.
உயிர்களைக் கொன்றாலும் பெண்குழந்தைகளைக் கொல்லாதீர்கள்
மனிதஇனத்தை அழிக்காதீர்கள் மடமை செய்யாதீர்கள்
கொயில்களை வைத்துக் கொண்டு எங்களை இப்படிக்கொல்லுவதா?
பெண்களிடம் இருப்பதும் கருஅறைதான் நீங்கள்கட்டிய
கோவிலில் கடவுள் இருப்பதும் கருவறையில் தான்.
எங்களைமட்டு்ம் கல்லறைக்கு அனுப்பாதீர்கள்
கல்நெஞ்சக்காரரே கல்லில் நீர்வடிகிறது
உங்கள் நெங்சில்கள்ளிப்பாலா வடிகிறது....
பூநகரி. பொன்னம்பலம் .முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து.28.06.2013.14.06.தி.ஆ2044-