யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அங்கு உரையாற்றிய பொதுச் கூட்டத்தில் இலங்கை அரசியலமைப்பின் கீழ் மேல்சபை(செனட்) ஒன்று உருவாக்கப்படும் என்றும், அதில் மாகாண சபையின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மக்களுக்கு நியாயமான கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வகையான அரசியல் தீர்வு என்று அவர் விளக்கமளிக்கவில்லை. இதன் பின்னர் மட்டக்களப்பிற்கு சென்ற அவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார். ஆனால் இனப் பிரச்சினை தொடர்பாக மட்டுமன்றி அரசியல் தொடர்பாகவோ எதுவும் குறிப்பிடாமல் பொதுவாகவே ஜனாதிபதி உரையாற்றினார். பின்னர் அவர் காத்தான்குடிப்பகுதிக்கும் சென்றார்.