திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வுகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு அனுமதி கிடைத்து, வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேநேரம் தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதி வணக்க நிகழ்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் திருமாவளவன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என அவர் மேலும் கூறியுள்ளார்.