குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சரத் பொன்சேகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா வியாழனன்று பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

முதலாவது நடவடிக்கையாக நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவேன் என்றும், இரண்டாவதாக ஊழலையும், மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் சரத் ஃபொன்சேகா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவை தவிர ஒவ்வொரு குடும்பத்தினதும் நிதிநிலைமையை உறுதிப்படுத்துவேன் என்றும், வாழ்க்கைச் செலவினங்களை குறைப்பேன் என்றும் கூறியுள்ள அவர் பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் உறுதி மொழிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை ஆரம்பித்து, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

வடகிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு குறித்து கருத்துக்கள் இல்லை

பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும் அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக கருதப்படும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் இணைப்பு குறித்தோ அல்லது சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ எந்த விதமான கருத்துக்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.