பசில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் 75 வீதமானவற்றில் மக்கள் விரைவில் குடியேற்றப்படுவார்கள் என்று வடக்கு செயலணிக்குழுவின் தலைவரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ்ப்பானத்தில் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று முதல் யாழ்ப்பாணத்தை இலங்கையின் தென்பகுதியுடன் இணைக்கும் ஏ-9பாதை இனிமேல் 24 மணிநேரமும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்திருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது நன்னடத்தை முகாமில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களில் 1000 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்