ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது மீண்டும் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான அழுத்தம், தோல்வியை எதிர்நோக்கிய அச்சம், மற்றும் கண் விழித்தல் என்பன இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
தற்போது அவரது காரியாலயத்திலும் அதிக கோபத்துடன் நடந்து கொள்வதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மருத்துவர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி தமது நாட்களை கழித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 200க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வைத்திய ஆலோசகர்களும் அதிகரித்துள்ளனர்.
இணையச்செய்திகளிலிருந்து..