சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவை தளமாகக்கொண்ட தமிழர் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளது.எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் டப்ளினில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கூடவுள்ளது.
இதன்போது, கடந்த வருடம் மாசி மற்றும் பங்குனி மாதங்களில் வன்னியில் வைத்தியசாலைகளின் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலான நான்கு செய்மதிப்படங்களை அமெரிக்கக்குழு சமர்ப்பிக்கவுள்ளது.
1907 ஆம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கை 1948 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கை என்பவற்றில், வைத்தியசாலைகள் போன்ற மருத்துவ நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.