குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

சிறிலங்கா அரசுக்கெதிரான போர்குற்றச்சாட்டு செய்மதி படச்சான்றுகளுடன் சமர்ப்பிக்கபடவுள்ளது

சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவை தளமாகக்கொண்ட தமிழர் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளது.எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் டப்ளினில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கூடவுள்ளது.

இதன்போது, கடந்த வருடம் மாசி மற்றும் பங்குனி மாதங்களில் வன்னியில் வைத்தியசாலைகளின் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலான நான்கு செய்மதிப்படங்களை அமெரிக்கக்குழு சமர்ப்பிக்கவுள்ளது.
1907 ஆம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கை 1948 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கை என்பவற்றில், வைத்தியசாலைகள் போன்ற மருத்துவ நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.