”மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்துஅறன்
ஆகுல நீர பிற”
ஒருவன் தன்மனத்தில் குற்றமற்றவனாக இருக்கவேண்டும் அதுவே அறம்(நீதி) ஆகும்.மற்றவையெல்லாம் ஆரவாரத்தன்மை கொண்டவையாகும். இவ்வாண்டு உலகமக்கள் இயற்கை பற்றியும் உயிர்களிடத்தில் மதிப்பும் கொண்டு வாழவேண்டும். சென்றாண்டு நிகழ்ந்த இனஅழிப்பை உலகத்தமிழர் மறந்துவிடக்கூடாது.அம்மக்களின் நலன் மேம்பட எல்லோரும் உழைக்கவேண்டும்.
ஊடகத்துறையினரும் இதற்காக பாடுபடவேண்டும். புதியாண்டில் தூயதமிழ் பேணுவோம். வடஇந்திய ஆதிக்கத்தால் தமிழுக்குள்
பிறவடமொழி எழுத்துக்களும் சொற்களும் வந்து தமிழ் சிதைந்து வருகிறது.புதியதலைமுறைக்கு தமிழ் சொற்களை ஊட்டுவோம் இது பெரிய தமிழ்த்தொண்டாகும் தொலைக்காட்சி செய்திகளிலும் நிகழ்ச்சிகளிலும் இவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
திரும்பத்திரும்ப கேட்கும் போதும் பார்க்கும் போதும் திருத்தம் வந்தேயாகும். யுத்தம் வருடம் வடசொல்.. போர் ஆண்டு தமிழ்ச்சொல்.. சுனாமி சப்பானியச்சொல்.. கடற்கோள் ஆழிப்பேரலை.. தமிழ்ச்சொல் எடுத்துக்காட்டாக இதைக் குறிப்பிட்டமை
மிகையாகாது என்ற கருத்தோடு தைப்பொங்கல் தமிழரின் ஆண்டுப்பிறப்பே புத்தாண்டு என்ற பொருளுடையது. தைப்பொங்கல் அன்றே தை(சுறவம்) பிறக்கின்றது. தமிழில் அக்கறையில்லாது சுறவ(தை) மாதத்தை யனவரி என்றும் கார்த்திகையை நவம்பர் என்றும் எழுதிவருகின்றனர். தமிழீழத்தில் பெயர்ப்பலகையில் தூயதமிழ் இருந்ததை நினைவுபடுத்தி மீண்டும் வாழ்த்தி விடைபெறுகின்றோம்