இக்கட்சியின் முடிவு காலத்தின் தேவைகருதியதாக அமைந்துள்ளது. அதாவது தனித்தோ அல்லது மகிந்தாவிற்கோ களத்தில் நிற்பதில் எதுவிதபயனுமில்லை என்பது கட்சியின் முடிவாகும். இதன்முடிவில் தமிழ் மக்களின் பங்களிப்பு மிகஅவசியமாகும். இக்கட்சியிடம் அரசியல் நகர்வை எமது தலைவர் முற்கூட்டியே ஒப்படைத்தமை தீர்க்கதர்சன சிந்தனையில் இதுவும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே தான் கட்சியின் முடிவை தமிழ் மக்களாகிய நாம் ஆதரிக்கவேண்டிய காலமாகும். இல்லையேன் நாம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எங்கள் இலட்சியத்தை அடையமுடியாமல் போய்விடும். கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிற்கு அடுத்துவரும் தேர்தலில் நாம் அவர்களிற்கான தண்டனையை வழங்க முடியும் எனவே அதுபற்றி இப்போது நாம் கவலைப்படாமலும், விமர்சனம் செய்யாமலும் இருப்பதே காலத்தின் கட்டாயமாகும்.
இதேபோல் தமிழ்மக்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரேகட்சி கூட்டமைப்பு. ஏனைய தமிழ் கட்சிகள் தற்போது கூட தவறுகளை உணராது துணைபோகும் கட்சிகளாகவும், மனிதநேயமற்று தமிழ்பண்பாட்டை சீரழித்து விலைபேசும் கட்சிகளை நம்பி எங்களிற்கு இருக்கும் ஒரேயொரு உரிமையை(வாக்கு) வீனாக்கிவிடாதீர்கள். மற்றும் வாக்களித்தால் ஆபத்து என பயம்கொள்ளாதீர்கள். காரணம் நீங்கள் போட்டவாக்கு யாருக்கு போடப்பட்டது என அறியவே முடியாது.
தமிழ்தேசியகூட்டமைப்பின் முடிவை மீறி சாதாரணமாக சுயேற்சை என்று முடிவெடுத்தவர்கள்.. மக்கள் மனதில் சாதாரணமாணவர்களாகவே ஆகிவிட்டார்.இவருக்கு முன்பே தமிழ்தேசியக்கூட்டமைப்பை மீறி அரசுக்கு வாழாட்டியவர்களுக்கும் இந்த தேர்தலில் மக்கள் ரற்ரா காட்டிவிடுவார்கள்..இதைவிடுத்து இவர்களைப்பற்றியெல்லாம் மக்கள் அதிகமாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை..
தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி - ஆக்கம் வன்னி விஐயன்.