தெலங்கானா ஆதரவு போராட்டம்இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் தெலங்கானாப் பகுதியில் நடைபெற்ற வேலை நிறுத்தம் அங்கு இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
நாட்டின் பல பாங்களையும் தலைநகர் ஹைதராபாத்துடன் இணைக்கும் சாலைகள் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளன.
தெலங்கானாப் பகுதியில் வன்முறை ஏற்படக் கூடும் என்கிற அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான பேருந்துகளும், 165 க்கும் அதிகமான ரயில் சேவைகளும் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேலை நிறுத்தம் தொடர்பில் சுமார் 350 பேர் வரை தற்காப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையின் உள்ளூர் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்திலித்திருந்து தெலங்கானா எனும் தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதது.
இந்தப் போராட்டத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயியவாதிகள் இயக்கமும் சில மாணவர்கள் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.