ஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கும் அதிகமாக பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பீட்டர் மூர் என்ற அந்த நபர் ஒரு கணினி நிபுணராவார். புதன்கிழமை காலை இவர் விடுவிக்கப்பட்டதாகவும் பிறகு அவர் பாக்தாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறைச் செயலர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட மூர் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மிலிபாண்ட் கூறியுள்ளார்.
வன்முறையை விட்டு விலகத் தயாரான ஆயுதக் குழுக்களுடன் இராக்கிய அரசு மேற்கொண்டுவரும் சமரச நடவடிக்கைகள் கராணமாக மூரை விடுவிப்பது சாத்தியமானதாக மிலிபாண்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் இராக்கிய நிதி அமைச்சகத்தில் இருந்து மூரும் அவருடன் இருந்த அவரின் நான்கு மெய் காப்பாளர்களும் கடத்தப்பட்டனர்.