பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்தவர்களுக்கான வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள வலது குறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படுகின்ற குழந்தைகள் 500 பேரை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கு அனுப்பி பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
நீதி அமைச்சு மற்றும், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனுமதியுடன், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடாக இந்தச் சிறுவர்கள் இன்று கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் இன்று கையளிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மனிக்பாம் முகாமில் நடைபெற்ற இந்தக் கையளிப்பு வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.
இந்தக் குழந்தைகளின் முதல் தொகுதியாக 170 பேர் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற அமைப்பின் தலைவராகிய டாக்டர் பாலசுந்தரம் அனந்த்குமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புலோலி தெற்கில் உள்ள உபய கதிர்காமம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் கிராமத்தில் வைத்து இந்தச் சிறுவர்கள் பராமரிக்கப்படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.