போராட்டக்காரர்களை அடுக்கும் போலீசார் இரானில் ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற வன்முறை கலந்த போராட்டங்களில் குறைந்தது எட்டுபேர் இறந்தது குறித்து, அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு, இரான் கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றியிருக்கிறது.
வெளிநாடுகள் இரானுக்குள் ரகசிய செயல்திட்டங்களை செயற்படுத்த முனைவதாக இரானிய வெளியுறவு அமைச்சர் மனுச்சர் மொடாகி அவர்கள் கூறியுள்ளார்.
அவரது கருத்துப்படி பிரிட்டன் முட்டாள் தனமாக பேசுவதை நிறுத்தாவிட்டால், பிரிட்டனின் முகத்தில் அறைந் தாற்போல இரான் எதிர்வினையாற்றும் என்றும் அவர் கூறினார்.
ஒன்றுமறியா அப்பாவி இரானியர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதை தாம் கண்டிப்பதாக ஒபாமா நேற்று கூறியிருந்தார்.
இரானிய போராட்டக்காரர்கள் தைரியமானவர்கள் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கூறியிருந்தார்.
இரானில் இருக்கும் பிரிட்டிஷ் தூதர் இரானிய அரசால் நேரில் அழைக்கப்பட்டு இரானின் கண்டனம் அவர் மூலம் முறையாக பதிவு செய்யப்பட்டது.