ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச்சென்ற வழியில் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களில் 47 பேர் மறுவாழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தொகுதியாக கொண்டுவரப்பட்ட 78 இலங்கை தமிழர்களில் 47 பேர் இன்று அனுப்பப்பட்டிருப்பதாக, இந்தோனேஷியாவின் மேற்குப்பிராந்தியத்தை சேர்ந்த சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் இகெடே வித்தியார்த்த அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
செவ்வாய்கிழமை காலை சுமார் ஆறு மணிக்கு சென்ற இவர்களில் 31 பேர் ருமேனியாவுக்கும், 16 பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்ற முதல் தொகுதியில் 15 பேர் சென்றனர். அவர்கள் அனைவரும் ருமேனியாவுக்கு சென்றனர். மீதமுள்ள 16 பேரும் விரைவில் வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான பயண ஆவனங்கள் தயாரானதும் அவர்களின் பயணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.