குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

டாக்டர் சிவபாலனை நீதிமன்றம் விடுவித்துள்ளது

போர்க் காலத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கிவந்தவர் டாக்டர்.சிவபாலன்
இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட்டுவந்த ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்களில் ஒருவரான சிவபாலன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வன்னியில் மருத்துவ சேவை வழங்கிவந்த மருத்துவர்கள் அங்கு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை, அரசின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கொடுத்தது தொடர்பாக இவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பிறகு கைதுசெய்யப்பட்டனர்.

பிறகு கொழும்பில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தாம் இந்த விபரங்களை அளித்ததாக இந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு மருத்துவர்கள், அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஐந்தாவது டாக்டரான சிவபாலன், முன்பு அரச சேவையில் இருந்திருந்தாலும், பிறகு அவர் புலிகளுக்காக வேலை பார்த்தாக அரசு முன்பு குற்றம்சாட்டியிருந்தது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.