நிவாரணப் பொருட்கள் வியாபாரம் நடக்கிறதுஇலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமக்கு நிவாரணமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து தமக்குத் தேவையான ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு வழங்கப் பட்ட பொருட்களை விற்று பிறவற்றை வாங்கி வருவதற்காக கொட்டும் மழையிலும் அவர்கள் வவுனியா நகருக்குச் சென்று திரும்புகின்றார்கள்.
முகாம்களில் இருப்பவர்கள் தடையின்றி வெளியில் சென்று வரலாம் என்ற வசதியை அரசாங்கம் செய்துள்ளதையடுத்து, அவர்களில் பலர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருபதாகத் தெரிகிறது.