கிளிநொச்சி கரைச்சிப் பகுதியில் 8 கிராமங்களில் மீள் குடியேற்றம் நிகழ்கின்றது.
1) யேந்தி நகர் 257 குடும்பங்கள்
2) உதய நகர் மேற்கு 235 குடும்பங்கள்
3) உதய நகர் கிழக்கு 76 குடும்பங்கள்
4) உருத்திரபுரம் கிழக்கு 194 குடும்பங்கள்
5) பெரிய பரந்தன் 94 குடும்பங்கள்
6) திரு நகர் தெற்கு 46 குடும்பங்கள்
7) கனக புரம் 45 குடும்பங்கள்
8) திரு நகர் வடக்கு 32 குடும்பங்கள்
இக்குடும்பங்களிற்கான நிவாரணப்பொருட்களை வழங்கும் பொறுப்பினை ப.நோ.கூ.சங்கங்கள் ஏற்றுச் செயற்படுத்தி வருகின்றன. தகரங்களும்.. தரப்பார்கள், மண்வெட்டி போன்ற உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களும் வழங்கப்படுகிறது. 25000 ரூபா பணமும் வழங்கப்படுகின்றது. இன்னமும் 350 குடும்பங்கள் கிளி.மத்திய கல்லூரியில் மீள் குடியேற்றத்திற்காக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஆர்.கேதீசுவரன் போருக்குமுன் இயங்கிய அதே பணிமனையில் அவரின் சேவையைத்தொடர்கின்றார். கிளிநொச்சி அரசாங்க செயலகம்(கச்சேரி)
கிளிநொச்சி கரைச்சி உதவி அரசாங்க அதிபர்
திருமதி.எசு(ஸ்) சுலோசினி போருக்கு முன் இருந்த அதே கட்டடத்தில் சேவையைத்தொடர்கின்றார்.
கிளிநொச்சி பூநகரி உதவி அரசாங்க அதிபர். திரு. சத்தியசீலன் அவர்கள் பூநகரியிலேயே தமது சேவையைத் தொடர்கின்றார்.
கிளிநொச்சி கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பணிமனை இன்னமும் இயங்கவில்லை.
கிளிநொச்சி பளை உதவி அரசாங்க அதிபர் பணிமனை?. மதிப்பிற்குரிய இவ் அரச அதிபரும், உதவி அரசாங்க அதிபர்களும் கிராமசேவகர்களும் ப.நோ.கூ.ச.ஊழியர்களும் மற்றும் கல்வி, அஞ்சல், மருத்துவத்துறை ஊழியர்களும் கடினமாக உழைத்து வருகின்றார்கள். இனித்தான் அரசியல்வாதிகள் வருவார்கள் வந்ததும் வாலாட்டலும், வால்பிடித்தலும் ஆரம்பமாகும்.