குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

இக்கியாசின் வெற்றி ரகசியம் வெளியீடு சுவிற்சர்லாந்தின் முதலாவது பணக்காரராம்.

05.12.2012-சுவிட்சர்லாந்தின் பெரும்பணக்காரரான இங்வார் காம்ப்ராடு(Ingvar Kamprad) "இக்கியா அறைகலன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வர்த்தகத் துறையில் வெற்றி வாகை சூடுவதன் முக்கிய காரணம், அந்நிறுவனம் தனியார் வசம் இருப்பதேயாகும்" என்று கூறினார்.

காம்ப்ராடு தனது மனைவி அமரர் மார்கரெட் பெயரில் லாசேனின் தொழில்நுட்பக் கூட்டரசு கல்லூரியில் ஒரு ஆய்வகத்தைத் தொடங்கினார்.

இந்த ஆய்வகம் சுற்றுப்புற அறிவியல் மற்றும் குளத்தில் வாழும் உயிரினங்களுக்கான மார்கரெட் காம்ப்ராடு ஆய்வகம் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழாவில் பேசிய காம்ராடு தனியார் கையில் இருப்பதால்தான் இக்கியா நிறுவனம் லாபகரமாக நடப்பதாகத் தெரிவித்தார்.

காம்ராடு பேட்டிகள் அளிப்பதில்லை என்றாலும் இணையதளம் வழியாக அளித்த பேட்டியின் போது இக்கியாவின் வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

உலகின் மிகப்பெரிய அறைகலன் விற்பனையாளராக விளங்கும் இக்கியாவின் வணிக முத்திரை 9 பில்லியன் யூரோ மதிப்புடையதாகும். வருடாந்திர வருமான அறிக்கையின்படி 2011ம் ஆண்டில் இலாபம் 10.3 சதவீதம் உயர்ந்துள்ளது. சரக்குகள் 25 பில்லியன் யூரோ மதிப்புக்கு விற்பனையாகி உள்ளன.

லாசேன் அருகில் வசிக்கும் காம்ப்ராடை பிரபல பத்திரிக்கையொன்று கடந்த வாரம், 39 பில்லியன் ஃபிராங்க் சொத்துடையவர் என்றும், இவரே நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.