குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பாப்பரசரை மோதிய பெண்

ரோமில் நடந்த கிறிஸ்துமஸ் தின பிரார்த்தனைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் மீது பெண் ஒருவர் மோதி அவரை தரையில் தள்ளிவிட்ட சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், பாப்பரசர் தமது வருடாந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழமை போல் வாசித்தார்.

புனித பீட்டர் சதுக்கத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் மத்தியில் அவர் உறுதியான குரலில் உரையாற்றினார்.

நேற்று வியாழக்கிழமை இரவு நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தின்போது பாப்பரசர் காயப்படவில்லை.

ஆனால் வயது முதிர்ந்த பிரஞ்சு கார்டினல் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

பாப்பரசரை நோக்கி பாய்ந்த பெண்மணிக்கு 25 வயது என்றும், அவர் ஸ்விஸ் மற்றும் இத்தாலி ஆகிய இரு நாட்டு குடியுரிமை உடையவர் என்றும் வத்திகான் தெரிவித்துள்ளது.

ஒரு ஆண்டுக்கு முன்பு இதேநாளில் பாப்பரசர் பிரார்த்தனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாவலர்களைத் தாண்டிச் செல்ல இதே பெண் முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த பெண்மணியின் மனநலம் குறித்து மருத்துவ ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.