குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இந்தோனேஷியாவில் கப்பலில் தங்கியிருந்த தமிழ் அகதி ஒருவர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்படுகையில் பிடிபட்டு இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இறந்துள்ளார்.

இந்தோனேஷியாவின் மராக் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை ஏற்றிய படகில் தங்கியிருந்த கொழும்பை சேர்ந்த ஜேகப் என்ற 29 வயது நபர் வியாழன் இரவு 11 மணி அளவில் இறந்துள்ளார்.

இவரது உடல் நிலை கடந்த இரு தினங்களாகவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சைக்காக இவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள வேந்தன் என்பவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருந்தும் அவை பலனளிக்காமல் போகவே அவர் இறந்துள்ளார் என இது பற்றி தமிழோசையிடம் பேசிய இந்தோனேசிய அதிகாரி கூறியுள்ளார்.

சர்வதேச குடியேறிகள் உதவி நிறுவனமான ஐ.ஓ.எம்.முடன் இணைந்து தாங்கள் கப்பலில் உள்ள அகதிகளுக்கு தம்மாலான உதவிகளைச் செய்துவருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.