வங்க மொழி ஐ நாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்று வங்கதேச அரசு கோரியுள்ளதை ஆதரித்து ஒரு தீர்மானத்தை மேற்கு வங்க சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.
வங்க மொழி 25 கோடி மக்களால் பேசப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும் வசிப்பவர்கள்.
இந்த கோரிக்கையை ஐ நா வுக்கு இந்திய நடுவணரசு அரசு அனுப்ப வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
செப்டம்பர் மாதம் ஐ நாவின் பொதுச் சபையில் பேசுகையில் வங்க மொழியை ஐ நாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வாதிட்டிருந்தார்.