கடும் குளிரால் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலந்தில் வெப்ப நிலை கிட்டதட்ட மைனஸ் இருபது பாகையை தொட்டு விட்டது. இதில் குறைந்தப்பட்சம் பதினைந்து பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு இல்லாதவர்கள் அல்லது குடித்துவிட்டு இரவில் வெளியே சுற்றியவர்கள்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமில் விமான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பனிகட்டிகள் கிடப்பதால் பல இடங்களில் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
பாதாள ரயில் பாதையில் ஐந்து ரயில்கள் பழுதடைந்ததை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்க்கு இடையேயான ரயில் போக்குவரத்தும் துண்டிக்கபட்டுள்ளது.