குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

கோதபாய ராயபக்‌சஒரு மனநோயாளி - விளக்குகிறார் மனோதத்துவ நிபுணர் பிரையன் செனவிரத்ன-குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராயபக்ச!

 

நாட்டைவிட்டு வெளியேறினார். 08.09.2012-கோதபாய ராயபக்‌சஒரு மனநோயாளி - விளக்குகிறார் மனோதத்துவ நிபுணர் பிரையன் செனவிரத்ன-குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராயபக்ச! நாட்டைவிட்டு வெளியேறினார்

 

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராயபக்‌ச ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மருத்துவர் பிரையன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மைத்துனரான இவர் ஒரு மனோதத்துவ நிபுணர் ஆவார்.

 

கோத்தபாய ஒருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரயன் தெரிவித்துள்ளார். இதனால் கோத்தபாய மிகவும் ஆத்திரமடைந்து காணப்படுகிறார் என அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

நாட்டில் இன்னும் விடுதலைப் புலிகள் இருப்பதாக இவர் கனவு காண்பதாகவும், புலிகள் ஒரு நாள் மீண்டும் வருவார்கள் என்றும், தற்போது கூட நாட்டில் புலிகள் ஆயுதத்துடன் நடமாடுகின்றார்கள் என்று கூறிவரும் கோத்தபாய, ஒரு பிரம்மையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராயபக்ச! நாட்டைவிட்டு வெளியேறினார்

 

புலிகளை அழிக்கிறேன், அழிக்கிறேன் என்று அடிக்கடி கூறிவந்த கோத்தபாய, புலிகளை வெற்றிகொண்ட பின்னரும் அவர்களுடன் ஆயுதப் போராட்டம் இன்னமும் நடைபெறுவதாகவும், யார் என்ன கதைத்தாலும் உடனே ஆத்திரமடையும் கோத்தபாய ராகபக்‌ஷ தனிமையில் இருந்து எதையோ யோசித்தவாறு ஒவ்வொரு நாட்களையும் நகர்த்துவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

புலிகள் தம்மை தாக்கக்கூடும் எனவும், தமது குடும்பத்துக்கு இதனால் பல ஆபத்துகள் வர இருப்பதாகவும் கோத்தபாய அடிக்கடி கூறிவருகிறார். அதுமட்டுமல்லாது புலிகள் விமானம் மூலம் வந்து இலங்கை மீது தாக்குதல் நடத்திவிட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறி, வான் படையை பலப்படுத்தவும், மற்றும் கடற்படையைப் பலப்படுத்தவேண்டும் என்று இவர் அடிக்கடி கூறிவருவதாகச் சொல்லப்படுகிறது.

 

இதுபோன்ற செயற்பாடுகளை வைத்து பார்க்கும்போது கோத்தபாய நிச்சயமாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார் நிபுணர் பிரையன் செனவிரத்ன.

 

2006ம் ஆண்டு விடுதலைப் புலிகள் கோத்தபாய ராயபக்‌ச மீது நடாத்திய தற்கொலைத் தாக்குதலின்போது தலையில் காயமடைந்த கோத்தபாய மனநிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என அவரது குடும்ப நண்பர் ஒருவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் உள்ள ப்ரிமென்ரல் டவுன் கோல் வரவேற்பறையில் “இலங்கை ஈழம் மனித உரிமைகள்’’ பற்றிய நீண்ட கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பசில் ராயபக்‌ச சரியாக செயற்படவில்லை என மகிந்த ராயபக்ச குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

பதிலுக்கு பசில் ராயபக்‌சவும் தனது பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராயபக்ச அநாவசியத் தலையீடுகளை மேற்கொள்கிறார் என கோபித்துக்குக் கொண்டுள்ளாராம்.

 

இதன் விளைவால் பசில் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தற்போது அமெரிக்கா சென்றுள்ள பசில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

கிழக்கின் நவோதயம் என்ற திட்டத்தை முன்னெடுத்து கிழக்கு அபிவிருத்தி விடயங்களுக்குத் பசிலே முழுமையாகத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் நாமல் ராயபக்ச திடீரென மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சென்று தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆளும் தரப்புடன் போட்டியிடுவதற்கு இணங்கச் செய்யும் வகையில் பசில் ராயபக்‌ச சரியாக செயற்படவில்லை என நாமல் நாமல் ராயபக்‌சவும் மகிந்தவின் மனைவி சிரந்தியும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

இவ்வாறான குடும்பத்தாரின் விசனத்தில் மனம் உடைந்து போயுள்ளாராம் பசில்.