கொழும்பில் நேற்று இடம்பெற்ற லலித் அத்துலத்முதலி நினைவு சொற்பொழிவின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மொழி, கலாசாரம் உட்பட பல விடயங்களில் இலங்கையின் வட பகுதியிலுள்ள மக்களுக்கும் தமிழ் நாட்டிலுள்ள மக்களுக்கும் இடையில் பொதுவானவையாக உள்ளன என்பதை இலங்கை உணரத்தவறிவிட்டது.
இலங்கைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே 20 மைல்கள் மாத்திரமே இடைவெளி உள்ளது. அதேவேளை, உலக மயமாக்கலின் யதார்த்தத்தின் கீழ் இலங்கை தனது அயல் நாட்டை புறக்கணித்துவிட முடியாது என அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவானது, இவ்விஜயம் முழுவதும் இந்தியாவின் தேசிய நலன்களுக்காக செயற்பட்டமை இலங்கைக்கு ஓர் முன்னுதாரணம் எனவும் அமைச்சர் கூறினார்.
புதுடெல்லியைவிட தமிழ்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை இலங்கை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் டியூ குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், யாழ்ப்பாணத்திற்கு வான் வழியாக இந்தியா உதவிப் பொருட்களை வழங்க தீர்மானித்தபோது லலித் அத்துலத்முதலி அதை எவ்வாறு ராஜதந்திர ரீதியாக கையாண்டார் என்பதையும் அமைச்சர் குணசேகர நினைவு கூர்ந்தார்.
வடக்கில் வான் வழியாக உணவுப்பொருட்களை விநியோகிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக எச்சரித்து, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திய எழுதிய கடிதத்திற்கான பதிலை லலித் அத்துலத் முதலியே வரைந்தார் என அமைச்சர் குணசேகர கூறினார்.