குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

ஐரிஷ் பாதிரிமார் செய்த சிறார் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு போப்பாண்டவர் வருத்தம் தெரிவிப்பு

 ஐரிஷ் கத்தோலிக்க சமூகத்தில் சிறார்களை பாதிரிமார் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது குறித்தும் அதனை கத்தோலிக்க திருச்சபை மறைக்க முயன்றமை குறித்ததும் அந்த சமூகம் வெளியிடும் கோபத்தையும், வெட்கத்தையும் புனித பாப்பரசர் பெனடிக்ட் பகிர்ந்துகொள்வதாக வத்திக்கான கூறியுள்ளது.

கடந்த மாதம் ஐரிஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றினால் அவர் மன அமைதியிழந்து, சஞ்சலத்துடன் காணப்பட்டதாக, ஐரிஷ் ரோமன் கத்தோலிக்க தலைவர்களை பாப்பரசர் சந்தித்ததை அடுத்து வத்திக்கான் கூறியது.

சில கத்தோலிக்க மதகுருமார் திட்டமிட்ட வகையில் பல தசாப்தங்களாக சிறார்களை துஸ்பிரயோகம் செய்ததாகவும், அந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட சிறார்களின் நலனை விட தமது திருச்சபையின் பெயர் கெட்டுவிடாமல் இருப்பதையே ஐயர்லாந்தில் உள்ள திருச்சபையினர் பார்த்துக்கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறியிருந்தது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.