குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கோபன்ஹேகனில் கார்பன் குறைப்பு வரைவு ஒப்பந்தம் பிரசுரம்

உலகின் செல்வந்த நாடுகள் தாம் வெளியிடுகின்ற வெப்ப வாயுக்களின் அளவில் மேலும் பெரிய குறைப்புகளைச் செய்ய வேண்டும் என்று கோரும் ஒப்பந்தம் ஒன்றின் வரைவு கோபன்ஹேகனில் நடந்துவரும் உலக பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அடுத்த வாரம் உலக நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும்போது அவர்களிடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்த ஆவணம் அடித்தளமாக அமையும்.

புவியின் வெப்பம் இரண்டு டிகிரி செல்ஷியஸ் மட்டுமே அதிகரிக்க இடம்தருவது என்பது இந்த வரைவுத் தீர்மானத்தின் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எவ்வகையில் நிதி கிடைக்கும் என்பதையோ, இந்த ஒப்பந்தம் சட்டப்படி உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய விதியாக எப்போது மாறும் என்பதையோ இந்த வரைவு ஆவணம் விளக்கியிருக்கவில்லை.

இந்த வரைவு ஒப்பந்தம் வெளியாகியிருப்பது நல்லதொரு முன்னேற்றம் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்கள் வரவேற்றுள்ளன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.