குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் தாம் கொண்டு சென்ற புதிய சாதனங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை பொருத்தினர்.

அதற்காக அவர்கள் விண்ணில் நடந்தனர். சில பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது மொத்தம் 3 தடவைகள் விண்ணில் நடை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டு 2 ஆவது நடையில் இந்தப் பணிகளை முடித்தனர். அடுத்த நடைப்பயணத்தை நேற்று திங்கட்கிழமை முடித்தனர்.

 சாதனங்களைப் பொருத்தும் பணியில் விண்வெளி வீரர்கள் மைக் போர்மேன், ராண்டி பிரெஸ்னிக் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்களில் பிரெஸ்னிக் அப்பாவாகும் மகிழ்ச்சியில் தனக்கு இட்ட பணியில் முதலில் ஆர்வம் காட்டவில்லை.

அவரது மனைவிக்கு எந்த நேரத்திலும் இரண்டாவது குழந்தை பிறக்கலாம் என்ற நிலை இருந்தது. எனினும், ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி ரெபேக்கா, ஹுஸ்டனில் இரண்டாவது குழந்தையைப் பிரசவித்தார். அதுவும் பெண் குழந்தை. அதனால் விண்வெளியில் அப்பாவான இரண்டாவது நபர் என்னும் பெருமை பிரெஸ்னிக்குக்கு கிடைத்துள்ளது.

முதல் விண்வெளி வீரர் மிக்கி பிங்கி, 2004 ஆம் ஆண்டு விண்வெளியில் இருந்த சமயம், அவரது பாரியார் குழந்தை ஒன்றை பிரசவித்தார். அதனால் அவர், விண்வெளி முதல் தந்தை என்ற பெருமையைப் பெற்றார். தற்போது இரு விண்வெளி வீரர்களும் விண்வெளி நடைப்பயண நேரத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை நேரத்துக்கு முன்னரே முடித்துவிட்டனர் என நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.