இக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கிவிடுவார்கள். சுவிற்சர்லாந்தின் பேர்ண்நகரத்தின் உயர்ந்த பகுதியான இன்ரலாகன் பகுதி அழகாக ஒலிக்கும் மலைகள் புல்வெளிகள் நீர்நிலைகள் ஆறுகள் சிறிற சிறிய நீர் வீழ்ச்சிகள். பனிமலைகள் மலர்ச்செடிவெளிகள் பனிப்படிமங்கள் மரங்கள் இலைகள் இன்றி மலர்கள மலர்ந்து குலுங்கும் அழகு மனதைக்கவரும் ஒருவகை நறுமணம் வீசும்.
சுவிசு கிராமசபைகள் நகரசபைகளும் தமது பங்கிற்கு வீதிகளை யும் துப்பரவாகவும் வீதி ஓரங்களையம் மலர்ச் செடிகளாலம் அலங்கரிப்பர். மாடிவீடுகளின் சாளரங்களில் அதற்கான மலர்ச் செடிகளை வளர்த்து அழகு படுத்துவர். இப்பொழுது திரு அழகு பொலிந்து காணப்படுகிறது. கோடைகாலம் வந்ததும் சுவசு மக்கள் உருஅழகையும் இணைத்து சுவிற்சர்லாந்தைச் சொர்க்க பகுதியாக்கி விடுவார்கள்.
இதை நாம் சொல்லவில்லை பலர் கூறியும் எழுதியும் உள்ளார்கள் அதில் சிறப்பாக கவிஞர் திரு.வைரமுத்து அவர்கள் இங்குநின்று பேசியவரிகள் சொர்க்கத்தின் ஒருபகுதி இங்குவிழுந்ததோ என்று எண்ணத்தோன்றுகின்றதோ என்று வியந்து பேசினார். வீதிகளின் கிராமங்களின் துப்பரவுபற்றிப் பேசினார். அத்தகைய அழகொலிக்க ஆரம்பித்திரக்கிறது.