குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

கோபத்தினால் ஏற்படும் துன்ப‌ங்க‌ள். எது சிறந்த தானம்?பகவான் புத்தர்உலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்

கோபத்தினால் ஏற்படும் துன்ப‌ங்க‌ள்

i)   மனதின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தீய எண்ணங்களால் கேடு வரும்.

 

ii)  நாவின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான சொற்களால் கேடு வரும்.

iii) உடலின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான செயல்களால் கேடு வரும்.

கோபத்தினால் வரும் துன்பங்களை பகவான் புத்தரும், திருவள்ளுவரும் இவ்வாறு விளக்குகிறார்கள்.

1.கோபக்காரன் முகமலர்ச்சியை இழப்பான்.

2.கோபக்காரன் அகமலர்ச்சியை இழ்ப்பான்.

3.கோபக்காரன் தூக்கம் இழப்பான்.

4.கோபக்காரன் நண்பர்களை இழப்பான்.

5.கோபக்காரன் உறவு இழப்பான்.

6.கோபக்காரன் அவமானப்படுவான்.

7.கோபக்காரன் புகழ் இழப்பான்.

8.கோபக்காரன் பொருள் இழப்பான்.

9.கோபக்காரன் நன்றி மறந்து கேடு செய்வான்.

10.கோபம் கோபத்தோடு மோதினால் அழிவு வரும்.

11.கோபக்காரன் அடுத்த உலகில் துன்பப்படுவான்.

 

பகவான் புத்தர்

 

எது சிறந்த தானம்?

தானத்தில்சிறந்த தானம்

நற்செயலில் சிறந்த நற்செயல்

அன்பில் சிறந்த அன்பு எதுவென்றால்

அறம்  ‌அறியாமல் வாழ்வோருக்கு

மீண்டும் மீண்டும் அறத்தை உபதேசம் செய்து,

அவர்களையும் அறநெறியில் ஒழுகச் செய்வதுவும்,

பக்தி இல்லாமல் வாழ்வோருக்கு

மீண்டும் மீண்டும் பக்தியை உபதேசம் செய்து

அவர்கள் உள்ளத்தில் பக்தியை பதிய வைப்பதுவும்,

அறிவும் ஒழுக்கமும் இல்லாதோருக்கு

கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதுவும்;

அருளில்லாதோருக்கு அருளை உபதேசம் செய்வதுவும்;

அதுவே, தானத்தில் சிறந்த தானம்

நற்செயலில் சிறந்த நற்செயல்

அன்பில் சிறந்த அன்பு

 

சிந்திக்கச் சில.........

 

1.குறைபாடுகள்  உடையவன்தான் மனிதன். குறை காண்பனும்  மனிதன்தான். பிறர் குறைகளைத் தேடுபவன் அரை மனிதன். தன் குறைகளைத் தேடுபவன் முழுமனிதன்.

 

2.பிறர் குறைபாடுகளை நம் கண் முன்னே காண்கிறோம். நம்குறை பாடுகளை மறைக்கின்றோம்.

 

3.மலர்களில் மணம் கமழுவது போல் நல்வினையால் புகழ் பரவும்.

 

4.கொடுப்பதால் நாம் செல்வம் பெருகும்; பெற்றுக் கொள்வதால் அன்று.

 

5.கருத்துடன் காண இரு கண்களூம் கருத்துடன் கேட்க இரு காதுகளும் குறைவாகப் பேச ஒரு நாக்கும் உள்ளன.

 

6.மிகப் பெரிய வெள்ளமும்  வடியும். மிகப் பெரிய புயலும் அமைதியாகும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.

 

7.கோபம் ஆறக் கூடியது. வெறுப்பு ஆறாது.வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்.

 

8.நம்மிக்கை இல்லாத வழிபாடு உயிரற்றது.

 

9.இரக்க குணம் மனிதனை உருவாக்குகிறது. அரக்க குணம் மனிதனை மிருகமாக்கிறது.

 

10.நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்.

 

11.அன்பு  உள்ள இடத்தில் அமைதியும் இன்பமும் இருக்கும்.

 

12.அன்பும் அறனும் இல்லாதவன் இறந்தவனுக்குச் சமம்.

 

13.அருட் செல்வத்தைப் பெற்று எல்லா உலகங்களுக்கும் மன்னனாக சீரும் சிறப்புமாக‌ வாழலாமே!

 

14.தீய எண்ணங்களை அழிக்க  இறைவழிபாட்டைத் துணயாகக் கொள்.

 

15.சரியான கருத்துகள் மனதில் இருந்தால் நல்ல எண்ணம், இனிமையான சொல், சுகம் தரும் செயல்கள் தோன்றும்.

 

உலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று. மற்றொன்று சீன இனம். உலகில் இன்று வாழும் தமிழ் மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும். சீன நாட்டில் “சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும் பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில் “தாமோர்” மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும், எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர். சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும்.

 

 

 

 

தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்று த்தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது. கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர். மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.

 

 

 

மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர். தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான். மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன. உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.

 

 

 

 

உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது. அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது. சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர். உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது. அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.

 

 

 

 

 

•தென்மொழி பெருஞ்சித்