குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சீனாவில் கறுப்புச் சிறைகள்: மனித உரிமை குற்றச்சாட்டு

சீன அரசின் காவல் உள்ளிட்ட அமைப்புகள் குடிமக்களைக் கடத்திச் செல்வதும், அவர்களைக் கறுப்புச் சிறைகள் என்றழைக்கப்படும் அறைகளில் சட்டத்திற்குப் புறம்பாக பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்து வருவதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.

கடத்தப்படும் சீன குடிமக்கள் சீன அரசி்ற்குச் சொந்தமான விடுதிகளிலும், உடல் நல மையங்களிலும், உளவியல் மருத்துவக் கூடங்களிலும் உள்ள அறைகளில் வைத்து சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவின் ஆலோசகர் சோபியா ரிச்சார்ட்சன் கூறியுள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதாகவும், சட்டத்தின் ஆட்சியை மதிப்பதாகவும் கூறும் சீனத்தில் உள்ள இப்படிப்பட்டக் கறுப்புச் சிறைகளை சீனா உடனடியாக மூடிட வேண்டும் என்று சோபியா ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

கறுப்புச் சிறைகளை சீன அரசு மூடிட வேண்டும், இவைகளை நடத்துபவர்களை விசாரிக்க வேண்டும், குடிமக்களை அவமானப்படுத்தும் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று சோபியா ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.