லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வர்த்தகர்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடுமென தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரது மனைவி தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு லிபிய நீதிமன்றம் தண்டனை விதிக்கக் கூடும் எனவும், தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னரே குறித்த நபர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.பி.பி நிறுவனத்தின் பணியாளரான ராச்சிட் உள்ளிட்ட இருவர் கடந்த ஒரு வருட காலமாக வீசா சட்டங்களை மீறியக் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சில காலமாக இனந்தெரியாத இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர்கள் அண்மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு திரும்பியுள்ளனர்.
லிபிய அதிபரின் புதல்வரை கைது செய்ததன் காரணமாகவே குறித்த இரண்டு நபர்களையும் லிபியா கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.