குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

வன்னிப்பரணி பாடஎண்ணி ஏடு எடுத்தபோது

கண்ணிரண்டும் நீர் கொட்டிக்கொடுமை கொக்கரித்தது.

கர்ப்பிணித் தாயின் வயிற்றை வந்துகிழித்த எறிகனை

குழந்தையின் குடலைக் காக்காய் நாய்க்கு வீசியது.

உணவின்றி வரண்ட குடலென்றும் உடலென்றும்

உணர்ந்த காக்காய் நாய்கூட அதை உண்ணாது சென்றது.

நாலறிவு ஐந்தறிவு விலங்கிற்குகூட அது விளங்கியது.

ஐ.நா. சபைக்கும் விளங்கியது.இந்தியாவிற்கு விளங்கவில்லை.

மண்கிடங்கில் உடும்புபோல் ஒழியவேண்டும்.

காயப்பட்டவருக்கு குருதி கொட்டினாலும் உதவமுடியாது.

எறிகணை மழை நீடிக்கும் கொடியநிலை...

ஒருவருக்கு துன்பமென்றால் பலர் அழலாம்.

ஒருவர் இறந்தால் பலர் அழலாம்..

பலரே இறந்தால் யார் அழுவது..

தலை இல்லாமுண்டம் கண்டார் கதறினார்..

தன் கையே இல்லை என்றறிந்து கதிகலங்கினார்..

கால்கள் இரண்டையும் இழந்து அழுபவர் நிலைகண்டு

கை இல்லாதவர் ஆறுதல் கொண்டார்..அழுவதை நிறுத்தினார்.

பசியென்ற குறை எண்ண நேரமில்லை.

பதுங்கு குழி தோண்ட உடலில் வலுவில்லை..

தாயின் வயிறு உணவறிந்து வாரக்கணக்காச்சு...

முலையில் பால்சுரந்து நாள்க்கணக்காச்சு..

குழந்தை உயிர் பிரிந்ததைக்கண்ட தாய் அழுவதற்கே வலுவில்லா அவலம்..

கிணற்றில் அள்ளிச் செம்பைநிறைத்து

அண்ணாக்காய் மடமடவெனத் தாகத்திற்கு தண்ணியருந்தினோருக்கு..

வவுனியா வந்திருந்து சுடுமணலில் வெந்து தவிக்கும் மக்களுக்கு

ஒருசாண் போத்தல் நீர்..

மேற்குலக உறவுகளே உலகத்தின் உதவிகள் போதுமா..

மேற்குலக உறவுகளே உலகத்தின் உதவிகள் எட்டமுன்

எம்முதவிகள் எம்மவருக்கு எட்டட்டும்....

பொ.முருகவேள்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.