27.11.2011திருவள்ளுவராண்டு.2042மறைந்தவர்களுக்கு ஒற்றைத்தீப விளக்குஏற்றுவதே தமிழர்மரபு. கார்த்திகை .27. என்று ஆரம்பித்தது இன்று நவம்பர்27 ஆனது போல்இனி..?
அதர்மம் அழியும் மகாபாரதம்.
கவசவாகனமும் கண்ணன் படமும்
ஒப்பாக பல்குழல்எறிகணை தாங்கி
சாரதியாக கொத்தபாய-சரத்-மகிந்த.....
முதலாவது பாதுகாப்பு அமைச்சு
அத்துலத்து முதலி எங்கே?
அடுத்தவர் இறைஞ்சன் விசயரத்தினா எங்கே??
ஆசியாவின் பெரியநுால் நிலையம்
எரியும்போது சிரித்தவர்கள் எங்கே ?
காணிநீரப்பாசன அமைச்சு
இனவிரோத நுணுக்கம் காமினி எங்கே?
பேசி ஏமாற்றிய தமிழ்பேசும்
தலைவரெங்கே விடுதலைநாளில். (சுகந்திர தின)நாளிலே!
தமிழர் கொட்டம் அடக்கப் புறப்பட்ட
கொப்பேக்கடுவா எங்கே அவர்புகழ் எங்கே?
1994 யாழ் வீழ்ச்சி!
மக்கள்
வன்னிக்கு பெயர்ச்சி !!
இராமலிங்கம்
சிங்கக்கொடி ஏற்றி
இரத்துவத்தை மரியாதை செலுத்தி
இருபது ஆண்டுகளுக்குள்
அவருக்கு மாவீரர்காலத்தில் அஞ்சலி!
அதர்மம் அழியும் மகாபாரதம்
கவசவாகனமும் கண்ணன் படமும்
ஒப்பாக பல்குழல்எறிகணை தாங்கி
சாரதியாக கொத்தபாய-சரத்-மகிந்த
தமிழர் வீடுகளில் மாட்டுங்கள்.
வடமொழியிலும் சிங்களத்திலும் எழுதுங்கள்
தீமை அழியும் தர்மம் வெல்லும்
அதற்காக காலந்தோறும் இரத்துவத்தை
அத்துலத்துமுதலி கொத்தபாய
தோன்றுவர் தோன்றுவர் தமிழர்களை அழிக்க....
பருத்துனாச்சாய சம்பவாமே யுகே யுகே..
பகவத்கீதை வாக்கியம். நல்லோரைக்காக்கவும்
தீயோரை அழிக்கவும் காலம்தோறும்(யுகந்தோறும்)
நான் தோன்றுவேன். கண்ணபரமாத்துமா.
இராவணகாவியம் படிக்காது கம்பராமாயாணம்
பாடமாக்கி உவாந்தியெடுக்கும் பாலபண்டிதங்கள்
தமிழ் மொழிவரலாறு தெரியாது ஆரியநுால்களுக்கு
குடைபிடித்து பிறமதப்பண்பாட்டில் மூழ்கிய
மூடராய் வலம் வந்து தமிழ் ஒளியேற்றாது இருளாக்கிய
இவர்களை தமிழ்மொழியாளர் என்பது எப்படி?
இந்த உணர்வு மிக்ககாலத்தில் கலக்கமின்றி
நீங்கள் தெளிவுபெறவேண்டுமென்றே
உயிர்களைக் கொடுத்தனர் உயர்ந்தவர்(உத்தமர்.)
இயக்கப்பெயர் என்றே பேசினோம்
அது என்ன என்று எண்ணினோமா?
அதுதான் தமிழ்ப்பெயர்!
புரிகிறதா புரியாமலிருந்தது.
அவர்களுக்குஇறுதிவணக்கம் செலுத்த
அருகதையிருக்கிறதா என்று எண்ணுக!
உன்பிள்ளைக்கு பெயர்தமிழா?
உன்கையொப்பம் உன்மொழியிலா!
தமிழ்மொழியை அமுல்படுத்தினாயா நீ?
கலியாணக் கணையாழியில் எந்த மொழி!
தமிழ்ப்பண்பாடு பட்டிருக்கும்பாடு கேடடில்லையா?
உன்மோதிர விரலில் மாட்டியிருக்கு பாரு!
கல்லறை சென்று கலங்காதே
உங்கள் கலக்கங்கள் குழப்பங்கள்
தெளிந்து தமிழனாக வாழ்
அதுவே அவர்களுக்கு போதும்.
தமிழ்வாழும் என்று மகிழ்வார்கள்.
குமரிநாடு.நெற்--தமிழர்களின் உணர்வுக்காலத்தில்.வர்கள்போல் தியாகிகளுக்கு உண்மையாய் மரியாதை செலுத்துவோம்.
27.11.2011திருவள்ளுவராண்டு.2042மறைந்தவர்களுக்கு ஒற்றைத்தீப விளக்குஏற்றுவதே தமிழர்மரபு. கார்த்திகை .27. என்று ஆரம்பித்தது இன்று நவம்பர்27 ஆனது போல்இனி..?