1041. |
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. |
1042. |
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். |
1043. |
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. |
1044. |
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். |
1045. |
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். |
1046. |
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். |
1047. |
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். |
1048. |
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. |
1049. |
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. |
1050. |
துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. |