931. |
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. |
932. |
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. |
933. |
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். |
934. |
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். |
935. |
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். |
936. |
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். |
937. |
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். |
938. |
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. |
939. |
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின். |
940. |
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். |