குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எம் யி ஆர் கல்லூரி மாணவன் தங்க தினேச் அவர்களுக்கு விருது!

01.03.2022 ......பிறந்த தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் தளபதி மு .க .சு(ஸ்)டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தியமக்கள் சேவகர் தளபதியின் விருதுகள் -2022க்கு தேர்வு செய்யப்பட்டு, மாணவர் த.தினேச் அவர்களுக்கு நட்சத்திர செல்வர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இளைய தலைமுறை திரு. தங்க தினேச் அவர்களை  சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர்,ஆசிரியர்கள், மற்றும் கனடாதமிழாழி வட்டத்தினர்,இத்தாலி மோகன் கெளரி இணையர்,கனடா நந்திநுண்கலைக்கல்லுாரி முதல்வர் தி.நரேந்திரா ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

இதனை பசுமை வாசல் அடிப்படை அமைப்பு திண்டுக்கல்( பவுண்டேசன்-திண்டுக்கல்)

கம்பன் கழகம் -கிருச்ணகிரி

தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம்-

கன்னியாகுமரி

சுகம் கல்வி அறக்கட்டளை- திண்டுக்கல்

ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வழங்கியது.

இளம் புயல் விருது

த.தினேச்,கார்டியாக் இலத்திரனியல் தொழில் நுட்ப (கேர் டெக்னால) ,, டாக்டர் எம் யி ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வேலப்பன்சாவடி, சென்னையில் இருக்கின்ற  கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கனடா தமிழர் தொலைக்காட்சியின் தமிழக இணைப்பாளராக பணியாற்றி வருகிறார். பேச்சாளர், இளம் கவிஞர், இளம் எழுத்தாளர் ஆவார்.

இளம் சாதனையாளர் ஆக சிறந்து  விளங்கிக் கொண்டிருக்கும் இவரது சாதனையை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் ,ஆசிரியப் பெருமக்கள் என அனைவரும் பாராட்டி இவரின் சேவை தொடர ஆசீர்வதித்து வருகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.