குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

வரலாற்றில் இருப்பது என்ன?

தென்னிந்திய, இந்திய  அரசுகளின்  ஆதிக்கம்

எப்போதும் இருந்து வந்திருக்கிறது!

தென்னிலங்கையர் விரும்பினாலும்

எதிர்த்தாலும் இது நிகழ்ந்துள்ளது.

இலங்கையர் தமிழர் எதிர்த்தாலும்

இவை நிகழ்ந்துள்ளது இதுவே நடைமுறை.

 


உண்மையான வரலாறுகளையும் அறிந்து

இலங்கையையும் அகழ்ந்து

பொய்யின்றி ஆராய்ந்தால்

அவைதரும் விடைகள் இவைதான்.


சிலர் அழைப்பதும் சிலர் எதிர்ப்பதும்

இருந்தே வந்துள்ளது.

அழைத்தவர் வடக்கேயும்

எதிர்த்தவர் தெற்க்கேயும்

என்று பிரிந்தனர்.


மத்தியில் பொலநறுவையில்

அனுராதபுரத்தில்

வந்தவரின் தடையங்களை அழித்தனர்

இருந்தோரை மாற்றினர்.


காடுகளில் மலைகளில்

இதற்கான சான்றுகள்

இன்றும் கிடைக்கின்றன

சிந்தனையில்லாது

சிங்களம் என்பதும்

தமிழர் பெளத்தம் என்பதை

ஏற்க மறுத்து ஏமாற்று

நாளும் நடக்கின்றது.


இரு தேசமோ ஒருதேசமோ

ஈழத்தில் என்றும் நடந்திருப்பது

இதுதான் எனவே இதை எண்ணி

அரசியல் பண்ணின் அறிவு!


பூநகரி பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து  02.02.2022

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.