குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

2022,கோவைத்திருக்குறள் மாநாடு வெளியுலகிற்கு தெரியாமல் நடந்தது! International Thirukkural Conference

09.01.2022...மாண்புமிகு தமிழக ஆளுநர்.  ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை, சிறி கிருச்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் என்ற சான்றிதழ் வழங்கியும், 5 தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கியும் கெளரவித்தார். குறள் மலை பெருநீதிப் பெருமகனார் விருது சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன், குறள் மலை வாழ் நாள் சாதனையாளர் விருது கோவை, கே.எம்.சி.கெச் மருத்துவமனையின் தலைவர் நல்லா.யி.பழனிசாமி, குறள்மலை மனுநீதிச் சோழன் விருது, கோவை, மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கம் மற்றும் குறள்மலை சிறந்தகல்வியாளர் விருது கோவை, எசு.எசு.வி.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசுகையில் ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் ஒலிக்க வேண்டும் . நாம் இதில் உள்ள நல்ல நல்லநிலைகளை, திருக்குறள் மூலம் நமது கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். தமிழின் முக்கியத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். மொழியை வளர்ப்பதன் மூலம் அம்மொழி பேசும் மக்களை வளர்த்தி, நாட்டை முன்னேற்ற முடியும் எனக் கூறினார்

விழாவில் தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.இரவி பேசியதாவது “நமது தேசம் புண்ணிய பூமி,  சான்றோர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், வாழ்ந்த நாடு.. திருக்குறளில் எவ்வாறு முறையாக வாழ்வது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. திருக்குறளின் மகிமை பாதுகாக்க வேண்டும். நாம் நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமைதியான வாழ்க்கையை நடத்த திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் பல நல்ல நிலைகளை எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளையும் உண்மையாக புரிந்து படித்தால் வாழ்க்கையில் எல்லோரும் போற்றும் நிலையை அடைய முடியும். திருக்குறள் நமது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற நல்ல செயல்களை பின்பற்றுங்கள். திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணமாக உள்ளது என்று கூறினார்.

மேலும்இம்மாநாட்டில்  1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும், மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெசுகோ  நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் மற்றும் உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண செய்யவேண்டும் போன்ற மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறள் மலைசங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து,  நிறைவாக நன்றியுரை ஆற்றினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.