குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்கள். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் [யாழ். மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினர் ] 20.12.2021.....சமீபத்தில்  கேள்வியொன்றுக்கான  உங்கள் பதிலைப் பத்திரிகையில்  படித்தோம். நீங்கள் சிங்களவர்களைப் பற்றி விரிவானமுறையில்  அறிக்கைகளை வெளியிடுவது போல் தெரிகிறது. நாம் அறிந்த வரையில் சிங்களவர்கள் இந்த தீவின் பூர்வீக குடிமக்களெனவும்  தமிழர்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பிற்குப் பிறகு வந்தவர்கள் என்பதாகவும் இருக்கிறது . நீங்கள் கூறுவது தொடர்பாக  என்ன ஆதாரம் உள்ளது? என்று ஒருவர் என்னிடம் கேட்டார்

அதற்கு எனது பதில்வருமாறு ;  சிங்கள அறிஞர்கள் பலரைப்போன்றே   இங்கிலாந்தில் இருந்து பேராசிரியர் வியேயநாயக்கவும் 1996 நவம்பர் 17 சன் டே  ஒப்சர்வர் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியி ருந்தார்.- “சிங்கள இனத்தின் தோற்றம் இலங்கையில் உள்ளது. சிங்களம் பேசிய இந்தியர்கள் இந்தியாவில் தோன்றியதற்கான விஞ்ஞானபூர்வமான  சான்றுகள் எதுவும் இல்லை. சிங்கள மொழி பேசுபவர்கள் சிங்களவர்கள். நிச்சயமாக இக்காலத்தில் சிங்களவர்கள் தங்கள் தாய்மொழியை மறந்துவிட்டு, புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற பிற மொழிகளைத் தழுவியிருக்கிறார்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் சிங்களவர்கள் முக்கியமாக சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்திருப்பார்கள். சிங்கள மொழி இல்லாமல் சிங்களவர்கள் இருந்திருக்க முடியாது.

சிங்கள மொழி எப்போது தோன்றியது?

கி .பி .848  (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) இல் ஆரம்பகால சிங்களப் படைப்பான  சியாபஸ்லகரா வா கும். அடுத்தது தம்பிய-அடுவா கட்டபடயோ, இது கிபி 918 இல் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) வெளிவந்தது. இந்த பிந்தி ய படைப்பில் பாளி  வார்த்தைகள் மாற்றியமைக்கப்பட்ட மற்றும் தூய வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. முதல் சிங்கள இலக்கணநூலான  சித்தாத் சங்கராய கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய  கல்வெட்டுகளில் சிங்களம் மக்களின் மொழியாகவும் இனமாகவும் குறிப்பிடப்படவில்லை. "சிஹல " (பாளி யில் சிங்கம்) என்ற சொல் முதன்முறையாக தீபவம்   சத்தில் (கி.பி. 5 ஆம் நூற்றாண்டு) நிகழ்கிறது. சிங்கங்களின் இருப்பு காரணமாக தீவு சிஹல  என்று அழைக்கப்பட்டது என்று ஒருமுறை மட்டுமே சொல் வருகிறது.

மகாவம் சத்தில் சிஹல என்ற சொல் இருமுறை வருகிறது. ஆனால் சிங்கள மக்கள் என்றோ சிங்களம் என்ற மொழியோ குறிப்பிடப்படவில்லை. ஆர்.ஏ.எல்.எச். குணவர்தன தன  து சிங்கத்தின் மக்கள் ;வரலாற்றிலும் எழுதப்பட்ட வரலாற்றுஆய்விலும் சின்ஹல அடையாளமும் சிந்தனையியலும்    [“The People of the Lion: The Sinhala identity and ideology in History and Historiography]” (Sri Lanka Journal of the Humanities Vol V:1-2 (1979))என்றநூலில்   கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில்உள்ள  முழு மக்களையும் உள்ளடக்கியதாக சிங்கள அடையாளம் இல்லை என்றும் .  ஆனால் ஒரு சிறிய ஆளும் வர்க்கம் மட்டுமேஎன்றும் கூறுகிறார் . இதன் அர்த்தம்  கி.பி 12 ஆம் நூற்றாண்டு வரை சிங்களம்  முழுமையான மக்கள் மொழியாக மாறவில்லையெ ன்பதாகும்.. உங்கள் கேள்வியின்பிரகாரம்   1970 களுக்கு முன் உருவாக்கப்பட்ட போலி வரலாறுநீங்கள் நம்புவதற்கு.ஊட்டப்பட்டது என்பதாகும் .

1970 களின் பின்னர் சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூட வட இந்தியாவிலி ருந்து விசயன்  வருகையில்  இருந்து இலங்கை வரலாற்றின் கதையைஆரம்பிக்கின்றதுஎன்பதை   சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போதுஎமது  சரித்திரப் புத்தகங்கள் முன்பு போல் விஜயன்  வந்ததிலிருந்து  ஆரம்பிக்கவில்லை. இலங்கையில் விசயன்  தரையிறங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இருந்த கற்கால நாகரிகத்துடன் அவை தொடங்குகின்றன. (கற்பனையான) விசயன்  வருவதற்கு முன்பே இந்தத் தீவில் நிரந்தரக் குடியேற்றங்கள், விவசாயம், ஆற்ற ல் களைப் பயன்படுத்துதல், இரும்பின் பயன்பாடு, நகரமயமாக்கல் போன்றவை இடம்பெற்றிருந்தன  என்பதை இப்போது நமது வரலாற்றுப் புத்தகங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

வட இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களின் பழங்கால வரலாறு குறித்தநூல்கள்  எதுவும்  பண்டைய வரலாற் றில் எந்த காலத்திலும் விசயன்  என்ற ஆளொருவரும் அவரைப்பின்பற்றும் 700 பேர்களுடன்     அவர்களின் கரையிலிருந்து  பு றப்பட்டதைப் பற்றிக்   குறிப்பிடவில்லை என்பது சுவாரசுயமானது. எனவே இப்போது நாம் வரலாற்றை (கற்பனையான) விசய வின் வருகைக்கு முன்னரான திகதிகளிலிருந்து   தொடங்குகிறோம். பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் பௌத்தத்தை மகிமைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட புனைகதை என்று நம்புவது வரலாற்று ரீதியாக மிகவும் நம்பத்தகுந்ததாகும். உண்மையில் ஆசிரியர் ஒவ்வொரு சரணத்தின்[சீர் ] முடிவிலும் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஆனால் (கற்பனையான) விசயன்  வருவதற்கு முன்னர் இந்த நாட்டில் வாழ்ந்தஇந்த மக்கள்  யார் என்பதை இதுவரை எமது சிங்கள வரலாற்றாசிரியர்கள் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணவில்லை. ஏனென்றால், உண்மையைச் சொல்லும் எந்த முயற்சியும் தமிழர்களுக்குப் பயனளிக்கும் என்பதுடன், சிங்களவர்களின் போலி வரலாறு அம்பலமாகிவிடும். "டெமல  பௌதாயோ" [தமிழ் பவுத்தர்கள்] நூலின் ஆசிரியர் தனது புத்தகத்தை மீள் பதிப்பு செய்வதைத் தடுப் பதற்கான   அழுத்தம் இருப்பதாகசமீபத்தில்  எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

1970கள் மற்றும்அதற்குப்பின்னரான  காலகட்டத்தின் முக்கியத்துவமானது  அறிவியல்ரீதியாக  தொல்லியல் ஆய்வுகள்  இங்கு இடம்பெறத் தொடங்கியதில் உள்ளது. அது மட்டுமின்றி, பிரான்சு, யேர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புலமை வாய்ந்த வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் யுனெசுகோ நிபுணர்களும் இணைந்து எமது உள்ளூர் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவினர். இதன் காரணமாக போலி  சிங்கள பௌத்த வரலாற்றாசிரியர்கள் முன்னேறுவது கடினமாக இருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு மற்றும் தென்னிலங்கையின் சில பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாராய்ச்சிகளின் படி 1 25 000 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. கலாநிதி சிரான் தெரணியகல தனது ஆய்வுகள் மூலம் இந்த விடயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

கற்காலத்தை பொதுவாக மூன்று காலங்களாகப் பிரிக்கலாம் 1. பழங்கற்காலம் (பழைய கற்காலம்) (கிமு 10000க்கு முன்) 2. மெசோலிதிக் (மத்திய கற்காலம்) (கிமு 10000க்கும் கிமு 8000க்கும் இடைப்பட்ட காலம்) 3. புதிய கற்காலம் (புதிய கற்காலம்கி. மு. 8000  முதல்கி.மு. 3000வரை). (கிரேக்கம் - லித்தோஸ் - கல்). ஆனால் சில பகுதிகளில் கி.மு. 10000க்கு முன்பே மத்தியகற்காலம்  காலம் தொடங்கியிருக்கலாம்.

30 000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மெசோலிதிக்[மத்தியகற்கால ] மக்கள் நமது மலைநாட்டிலும் தாழ்நிலங்களிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. சுமார் 75 சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த மெசோலிதிக் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முக்கியமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நாடோடி வாழ்க்கை நடத்தினார்கள். குகைகள், குன்றுகள் மற்றும் சமதளங்களில் உள்ள கண்டுபிடிப்புகளிலிருந்து நாகரி கத்தில் அவர்களின் முன்னேற்றம் உணரப்படுகிறது.

இந்த மக்களுக்கும் தற்போதைய தமிழ்நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கும் இடையேயான வாழ்க்கை முறைகளில் நெருங்கிய ஒற்றுமைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தொல்லியல், மானிடவியல் மொழியியல் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் நிபுணர்களால் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் பேசும் தமிழ் மொழியில் காணப்பட்ட சுமார் 200 சொற்கள் பின்னர் சிங்கள மொழிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பயன்படுத்திய கருவிகள் நமது மத்திய கற்கால கால மக்கள் பயன்படுத்தியவை என்று அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டுள்ளது. பேராசிரியர் இந்திரபாலா வின்  கூற்றுப்படி, இந்த நாகரிகம் தென்னிந்தியாவில் இருந்து வட இலங்கை வரை பரவியது, பின்னர் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீவில் ஆரம்ப இரும்புக் காலம்   அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கும் தென் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் காண்கிறோம். 1970 களில் கந்தரோடையில் ஆய்வுகளை மேற்கொண்ட விமலா பெக்லி, பழங்காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசித்தவர்கள் தற்போதைய தமிழகத்தின் தென்பகுதியுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தனரென்ற முடிவுக்கு வந்திருந்தார்.

இலங்கையில் அ வர்களது கலாசார தொடர்பு கந்தரோடை தொடக்கம் புத்தளம் வரை பரவியுள்ளது. குறிப்பாக புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பு, கந்தரோடையில் காணப்படுவதுடன்  மிக நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டிருந்தது. பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையின் கற்கால மக்களின் கலாசாரம் அன்றைய தென்னிந்திய கலாசார சூழலின் எல்லைக்குள் வந்தது என்பதை பேராசிரியர் இந்திரபாலா வும் உறுதிப்படுத்துகிறார்.

இதனால் இலங்கையின் ஆரம்பகால குடிமக்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து இப்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மகாவம்சத்தின் காலத்திற்கு முன்பே, இலங்கை தென்னிந்தியாவைப் போன்ற ஒரு கலாசாரத்தை கொண்டிருந்தது  மற்றும் அந்த பழங்காலத்தவர்கள் தற்போதைய சிங்கள மற்றும் தமிழர்களின் முன்னோர் களாக இருந்தனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தப் பழங்காலத்தவர்களுக்கு இன வேறுபாடுகள் இல்லையென்றாலும் கலாசார வேறுபாடுகள் மட்டுமே இருந்ததாக பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க கூறியுள்ளார். இந்த வேறுபாடுகள் விசயன்  என்று அழைக்கப்படுபவர் தீவுக்குச் செல்வதற்கு முன்பே இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார். பண்டைய கற்கால மக்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை ஆய்வு செய்தால், அவர்கள் தங்கள் பெயரையோ அல்லது மண் பானைகள் மற்றும் பாத்திரங்களை வடிவமைத்தவர்களின் பெயர்களையோ பொறிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்தப் பழக்கம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அன்றைய காலகட்டத்தில் இருந்ததாகக் காணப்படுகிறது.

இந்தப் பழக்கம் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. தமிழ்நாட்டிலும் அநுராதபுரத்திலும் மண் பானைகளில் இந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அநுராதபுர பானைகள் 2750 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைச் சேர்ந்தவை. பானைகளில் உள்ள எழுத்துக்கள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியாவில் எழுத்து தொடங்கியது. ஆனால் தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் இந்த எழுத்துக்கள் மிகவும் முன்னதாகவே இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இப்போது வரலாற்றாசிரியர்கள் எழுத்துக் கலை தெற்கிலிருந்து வட இந்தியாவுக்குச் சென்றதாக நம்புகிறார்கள்.தென்னிந்தியாவின் மதுரை யில் சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சிகள் இந்தியாவில் உள்ள அனைத்து நாகரிகங்களுக்கும் முன்னரான  நாகரிகத்தின் சான்றுகளைக் காட்டுகின்றன.  இலங்கையில் பௌத்தம் புகுத்தப்படுவதற்கு முன்னரே, தற்போதைய சிங்கள, தமிழர்களின் முன்னோர்கள் இங்கு வாழ்ந்தவர்கள் என்பது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். சமீபத்திய டிஎன்ஏ சோதனைகள் இதை உறுதிப்படுத்தின.

சிங்கள எழுத்துக்களை ஆராயும் போது, ​​பேராசிரியர் பெர்னாண்டோ, பேராசிரியர் சத்தா மங்கள கருணாரத்ன மற்றும் பேராசிரியர் ஆரிய அபேசிங்க ஆகியோர், பௌத்தத்துடன் வட இந்திய பிராகிருதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே, தென்னிந்திய எழுத்தைப் போன்றே இலங்கையில் இருந்ததாகக் கூறியுள்ளனர். சிங்கள மொழி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் தமிழ் எழுத்தும் தமிழ் மொழியும் திராவிடச் சொற்களும் பயன்பாட்டில் இருந்ததை அவர்களின் ஆய்வுகளிலிருந்து நாம் சேகரிக்க முடியும். அதனால்தான்,எ மது முன்னோர்களின் மொழி தமிழ் என்றும், இலங்கையின் பூர்விக  பழங்குடி மக்கள் தமிழர் என்றும் நான் தைரியமாகச் சொன்னேன்.

கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தத் தீவில் பௌத்தம் பரவியது. அடையாளம் காணப்பட்ட 1500 கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கல்வெட்டுகளில் வட இந்தியாவிலிருந்து பிராமி எழுத்துகள் மற்றும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அப்போது சிங்கள எழுத்துகளோ சிங்கள மொழியோ சிங்கள மக்களோ இல்லை. பௌத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரும், வட இந்திய பிராமி எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரும் இலங்கையில் தமிழ் மொழியே பயன்பாட்டில் இருந்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

பேராசிரியர் பரணவிதாரண  வட இந்திய பிராகிருதத்தை பழைய சிங்கள எழுத்து என்று அடையாளம் காட்ட முயன்றாலும், பிராகிருதம் எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்ட முயன்றாலும், பௌத்தம் பரவியவுடன் பிராகிருத எழுத்துகளும் பரவியதால், பேராசிரியரின் இந்தக் கூற்று இப்போது ஏற்கப்படவில்லை. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் கல்வெட்டுகளின் எழுத்துப்படிவம்  700 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்தது. பிராகிருதம் பழைய சிங்களம் அல்ல. அப்படி இருந்திருந்தால், ஏனைய  தென்கிழக்காசிய நாடுகளிலும் சிங்கள மொழி பேசப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் பௌத்த கல்வெட்டுகளின் மொழி தமிழா கும்.. பொதுவாக வட பிராமி பயன்படுத்தப்பட்டாலும், இலங்கையில் உள்ள 1500 பிராமி கல்வெட்டுகளை ஆய்வு செய்தால், கூடுதலாக பல தமிழ் வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகத் தனிப்பட்ட  தமிழர்களின் பெயர்கள் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன . தனிமனிதர்களுக்கிடையேயான உறவுகள் தமிழ் மொழியில் குறிப்பிடப்படுகின்றன. இடப்பெயர்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் ஆட்சியாளர்களின் பட்டங்கள்  கூட தமிழில் எழுதப்பட்டன. இது பௌத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இலங்கையில் தமிழ் மொழி இருந்ததைக் காட்டுகிறது, எனவே பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் தமிழர்கள் இந்தத் தீவில் பூர்வீகக் குடிகளாக இருந்தனர்.

சிங்கள மொழியின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தால், மலையாளத்தின் பரிணாம வளர்ச்சியில்நாம்  ஒரு சமாந்தரத்தை .கொண்டிருக்கிறோம். தற்போதைய கேரளம் , தமிழ்நாட்டில் தமிழ் பேசும் பகுதிகளில் ஒரு பகுதியாக இருந்தது. அவை சேர மன்னர்களால் ஆளப்பட்டன. கி.பி 10 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மொழியின் மீது சமஸ்கிருதத்தின் பெரும் தாக்கத்தால் தமிழ் மலையாளமாக மாறியது. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மலையாளத்தில் கொண்டு வரப்பட்டது. எனவே இன்று சென்னையில் ஒரு புதிய மொழியைக் குறிப்பிட்டேன். தமிழ் மற்றும் ஆங்கிலம் 25 முதல் 50 ஆண்டுகளில் 'தமிலிச' சை    உருவாக்கலாம்.

அதேபோன்று இலங்கையில் பௌத்த மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட பாளி  மொழியானது உள்ளூர் தமிழ் மொழியுடன் கலந்து கி.பி 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டுகளில் சிங்களம் என்ற புதிய மொழியாக உருவானது.

இதற்கான ஆதாரங்கள் சிகிரியாவில் காணப்படுகின்றன. கி.பி 5 ஆம் நூற்றாண்டின் சிகிரியா கல்வெட்டுகள் ஆரம்பகால சிங்களவர்களை இன்னும் முறையான  மொழியை  உருவாக்கவில்லை என்பதை சித்தரிக்கிறது. இதனால் கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மொழி இருந்ததற்கான ஆதாரம் இல்லை. பல்லவர் கால கிரந்த எழுத்துக்களுடன் பிராமி எழுத்துக்கள் கலந்ததால் சிங்கள எழுத்துமுறை உருவானது.

இராயவளி ய, பூயாவளி ய போன்ற சிங்கள இலக்கியங்கள் கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

உங்கள் கேள்வியில் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பின் போது மட்டுமே தமிழர்கள் இங்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தீவில் வெகுகாலமாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்போது இந்து சமுத்திரத்துக்கு  அடியில் இருக்கும் லெமூரியாக்  கண்டத்தின் காலத்திலிருந்து இருக்கலாம். முன்னைய  தமிழ் சங்க காலம் மற்றும் இரண்டாம் சங்க காலம் (முதல் சங்கம் மற்றும் இடை சங்கம்) கடந்த சங்க கால (கடை சங்கம்) இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது  முன்னைய  சங்க கால இலக்கிய படைப்புகள் கடை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. தமிழ் இந்த உலகின் ஆரம்பகால மொழிகளில் ஒன்றாகும்  பழங்காலத்திலிருந்தே பாண்டிய, பல்லவ, சோழர் இலங்கையை  வெற்றிகொண்டிருந்தனர் . இதனால் தமிழ் ஊடுருவல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நாட்டி ல்  வாழ்ந்து  வருகின்றனர். பௌத்தம் சிங்களவர்களுடையது என்றும் இந்து மதம் தமிழர்களுடையது என்றும் குறிப்பிடும் தற்போதைய போக்கு பிழையானது. ஒரு நாட்டிற்குள் மதங்கள் புகுத்தப்படும் போது குறிப்பிட்ட இனம் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்படுவதில்லை. இத்தீவில் பௌத்தம் புகுத்தப்பட்டபோது சிங்களவர்கள் யாரும் இருக்கவில்லை. இதனால் தமிழ் மன்னன் தேவநம்பிய தீசன் புத்த மதத்திற்கு மாறினார்.

பாளி  இலக்கியங்களிலும் பிராமிக் கல்வெட்டுகளிலும் தமிழ் பௌத்தர்கள் இருந்ததற்கான கணிசமான சான்றுகள் உள்ளன. தமிழ் மன்னர்கள் பௌத்தம் மற்றும் பௌத்தநெறிகளை  ஆதரித்த போது அவர்களுக்கு புத்த தாசன் மற்றும் புத்ததேவன் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.

15 அல்லது 16 ஆம் நூற்றாண்டு வரை பாளி இலக்கியத்தின் படி தமிழ் பௌத்தர்கள் இருந்தனர். வட இலங்கையில் உள்ள நயினாதீவு கல்வெட்டுகள் தமிழ் பௌத்தர்களைக் குறிக்கின்றன. பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “டெமல பௌதயோ”வில் தமிழ் பௌத்தர்களைக் குறிப்பிடுகிறார்.

சமீப காலமாக சிங்களவர்கள் தங்களை பௌத்தர்களாகவும் தமிழர்களை இந்துக்களாகவும் சித்தரிப்பது துருவமயமாக்கலை  ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம். இதை தவிர்த்திருக்கலாம் என்கிறார்.

1940 களில் நான் பழைய அநுராதபுரம் நகரில் வாழ்ந்த போது நுவரெவவைச் சுற்றி ஏராளமான காணிகளை வைத்திருந்த தமிழர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தமிழ் பவுத்தர்களாக  இருந்தனர். நான் கூட எனது பெற்றோருடன் (இருவரும் இந்துக்கள்) ருவன்வெலிசாய மற்றும் மகாபோதிக்கு சென்று வழிபடுவது வழக்கம். பொசனின் போது “பொங்கல்” செய்ய பக்கத்து கிராமங்களில் இருந்து வந்த பௌத்தர்களுடன் சேர்ந்தோம். பௌத்த தத்துவம் என்னில்  கணிசமான அளவு  செல்வாக்கை செலுத்தியிருந்தது . டாக்டர்.அதிகாரம் மற்றும் ஏனையவர்களுடன்  சேர்ந்து, நாங்கள் தத்துவஞானி யே. கிருச்ணமூர்த்தியை  பின்பற்றுபவர்களாக இருந்தோம், அவருடைய போதனைகள் பௌத்த தத்துவத்துடன் நெருக்கமாக இருந்தன. நிச்சயமாக பின்னர், இந்து புனிதர்களால்   எனக்கு பவுத்த  தத்துவத்தின் எல்லைகளை  சுட்டிக்காட்ட முடிந்தது.


விசயனின்  வருகையின் போது தமிழர்கள் இருந்தார்கள் என்பதை நிரூபிக்க மகாவம்சம் கூட ஒரு பயனுள்ள குறிப்பு புத்தகம் என்று பேராசிரியர் புசுபரட்ணம் கூறியுள்ளார்.


விசயனின் வேண்டுகோளின் பேரில் 18 தொழில்களில் ஈடுபட்ட  1000 தமிழ் குடும்பங்களுடன் மதுரையில் இருந்து 700 தமிழ் மணப் பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதை மகாவம்சம்  குறிப்பிடுகிறது .அதாவது மதுரையில் இருந்து நாட்டிற்கு மதுரையிலிருந்து வந்த 700 தமிழ் குடும்பங்களை விட அதிகமான தமிழ் குடும்பங்கள் வந்துள்ளன ! இது மகாவம் சத்தின் கூற்று!

தமிழர்கள் ஒரு பக்கம்,மறுபக்கம் கடல்  என்று துட்ட காமினியின் கூற்றும் கூட அந்நாட்டில் அதிக அளவில் தமிழர்கள் இருந்ததையே குறிக்கிறது என்கிறார் பேராசிரியர் புசுபரத்தினம். எல்லாளன் ஒரு தமிழ் மன்னன், எனவே கி.பி.10 ஆம் நூற்றாண் டில் சோழர்கள்  வெற்றிகொண்டகாலத்திலேயே  தமிழர்கள் முதற் தடவையாக வந்தார்கள் என்று  எவ்வாறு  கூறமுடியும்

இறுதியாக தமிழர் தாயகம் பற்றி ஒரு வார்த்தை. தமிழ் நாட்டில் பக்தி வழிபாட்டு முறைதோன்றுவதற்கு  முன்பே வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியிலும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. பாளி  இலக்கியம் மற்றும் சில கல்வெட்டுகள் அநு ராதபுரத்தில் தமிழர்களின் இருப்பு மற்றும் செல்வாக்கு பற்றி  குறிப்பிடுகின்றன.

சுதந்திரத்திற்கு முன்னர் அநுராதபுரத்தில் தமிழர்களின் செல்வாக்கு பழைய நகரத்தில் கணிசமானதாக இருந்தது. புதிய நகரம் நிர்மாணிக் கப்பட்டது, அநுராதபுரத்தில் தமிழ் செல்வாக்கைக் குறைக்கவும் மறுக்கவுமான  நிர்பந்தம் ஏற்பட்டது எல்லாளனின் தலைநகரை அடைவதற்கு முன்னர் துட்டகைமுனு  வெற்றி கொள்ள வேண்டிய 32 குறுநில   தமிழ் மன்னர்களை மகாவம்சம் குறிப்பிடுகிறது. கண்டெடுக்கப்பட்ட அன்றைய காலத்து நாணயங்கள், தெற்கிலிருந்து வடக்கு வரை தமிழ் இருப்பை சுட்டிக்காட்டுகின்றன. அந்த நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. தமிழ்குறுநில  மன்னர்களின் பெயர்கள் சிலவற்றில் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் பக்தி வழிபாட்டு முறை செழித்த பிறகு, இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் பல தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு செல்ல விரும்பினர், ஏனெனில் அங்கு பிரபலமான இந்து கோவில்கள் உள்ளன. பக்தி வழிபாட்டின் விளைவாக சைவ மதம் மீண்டும் தோன்றியதன் காரணமாக சமணமும் பௌத்தமும் வழக்கற்றுப் போகத் தொடங்கிய காலம் இது.

தென்னிந்தியாவில் நாயன்மார்களின் தேவாரங்கள் இலங்கையில் உள்ள திருக்கேதீசுவரம் மற்றும் திருக்கோணேசுவரம் பற்றி குறிப்பிடப்படு கின்றன.குறிப்பாக திருகோணமலை முழு சைவத் தமிழ் நகரம் என்ற குறிப்பு உள்ளது. சோழர்கள் பொலநறுவையில் இருந்து ஆட்சி செய்த போது அவர்களின் வணிக நிலையமாக திருகோணமலை இருந்தது. சோழர் ஆட்சிக் காலத்தில் வடக்கும் கிழக்கும் தமிழர்கள் வாழ்ந்த தனிப் பகுதி. யாழ்ப்பாண இராச்சியம் சோழர் ஆட்சியின் விளைவாக இருந்தது. 13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண இராச்சியம் இருந்தது. புத்தளம் யாழ்ப்பாண அரசரின் கீழ் வந்தது. உடப்பு இன்னும் ஒரு தமிழ் கிராமம்.

டச்சுக்காரர்கள் [ஒல்லாந்தர்] தங்கள் ஆட்சிக் காலத்தில் நாணயங்களைக் கொண்டு வந்தபோது அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவற்றை தமிழில் அச்சிட்டனர். இதனால் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களாக இருந்தன.

முடிவாக,  தமிழர்கள் இந்த தீவின் பூர்வீக குடிமக்கள் மற்றும் பல தமிழ் வெற்றி கள்  உள்ளன, ஆனால் அவர்கள் வரலாற்றுக்குமுன்னைய   காலங்களிலிருந்து இங்கு தொடர்ந்து வாழ்ந்துவந்த  பூர்விக பழங்குடி தமிழர்களுடன் சேர்ந்துள்ளனர் . சோழர்களின் வெற்றி தென்னிந்தியாவில் இருந்து அத்தகைய ஒரு ஊடுருவல் மட்டுமேயாகும் . பழங்காலத்திலிருந்தே சிங்களவர்களும் தமிழர்களும் பொதுவான முன்னோர்களைக் கொண்டிருந்தாலும் சிங்கள மொழியும் சிங்கள இனமும் காலவரிசைப்படி மிக சமீபத்தியவை.

கொழும்பு  டெலிகிராப்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.