குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பன்னாட்டு விருதினை பெற்றார் பார்வதி சிவபாதம்-வாழ்த்துக்கள்! எந்தஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை!!

05.12.2021....தி. ஆ 2021...இலங்கைத் தமிழ் திரைப்படப்பரப்பில் தற்போது பேசுபொருளாக மாறிக் கொண்டி ருக்கும் ஒரு திரைப்படம் வெந்து தனிந்தது காடு.உலக பன்னாட்டு திரைப்பட விழாக்களில் பலவற்றில் இது பயணித்துக் கொண்டிருக்கின்றது கடந்த வாரம் இலங்கை தமிழ் சினிமா பரப்பில் ஒரு வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியிருக்கின்றது.

72 வயதுடைய கலைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈழத்தின் மக்கள் மனங்களில் இடம்பிடித்த பாடகியான திருமதி பார்வதி சிவபாதம் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது ஒன்றை பெற்றிருக்கின்றார.;

அந்தமான் நிக்கோபார்டில் பன்னாட்டு திரைப்பட விழாவில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகை விருதை இவர் பெற்றிருந்த அதேநேரம் இந்த திரைப்படம் இந்தியாவில் இடம்பெறும் உருவட்டி திரைப்பட விழாவில் 5 சர்வதேச விருதுகளை பெற்று இருந்தது

படத்தின் சிறந்த இயக்குனர் சிறந்த கதாசிரியர் சிறந்த தயாரிப்பாளர் சிறந்த அறிமுக இயக்குனர் சிறந்த கவர்படம் ஆகியவற்றுக்கான விருதுகைளபெற்றிருந்தது.

இதுவரை வெந்து தணிந்த திரைப்படம் பன்னாட்டு ஒருங்கிணைப்பின் விருதுகளை பெற்றிருக்கிறது தயாரிப்பாளர்களே இல்லாமல் தளம் ஒன்றில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக மக்களில் இருந்து சேகரித்த பணத்தின் மூலம் இந்த திரைப்படம் உருவாக்கம் பெற்று இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் 150 நபர்கள் இணைந்து முதலீடு செய்து இப்படத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் பலரால் அறியப்பட்ட திரைப்பட செயற்பாட்டாளரான மதிசுதாவின் மூன்று வருட தொடர்ச்சியான உழைப்பின் மூலம் இந்த படத்தை ஐபோன் கைபேசியில் உருவாக்கி முடிந்து இருக்கின்றார்கள்.

ஈழத் தமிழ் திதிரைப்படத்தரப்பில் திரைப் படங்களில் காணப்படும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியில் வெந்து தணிந்த காடுகள் சாதித்து காட்டிய மையத்தின் சினிமா படைப்பாளி மேலும் ஊக்குவித்து இருக்கின்றது இவர்களுக்கு தமது வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்

ஆனால் தமிழ்நாட்டின் எந்த ஊடகத்திலும் செய்தி பிரசுரிக்கத் தயாரில்லை என்பது, அதற்காக முயன்ற ஒவ்வொரு ஈழத்தவருக்கும் வருத்தமே. எங்கள் திரைத்துறையால் என்றைக்கும் உங்கள் வியாபாரத்துக்கு பங்கமில்லை தமிழகமே என டுவீட்டர் பக்கத்தில் டுவீட்செய்துள்ளர்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.