குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இன்று சித்தர் வீரமாமுனிவரின் 341 ஆவது பிறந்தநாள்:1680 நவம்பர் 8 இல் இத்தாலியில் பிறந்தார்.

13.11.2021....   1680 நவம்பர் 8 இல் இத்தாலியில் பிறந்த Constantine Joseph Beschi  என்ற கிறிசுதவ பாதிரியார் 1711 மே மாதம் தமிழ்மண்ணுக்கு வந்து சேர்ந்தார். மக்களுடன் பழகுவதற்கு தமிழ் மொழி கற்றார். தமிழின் சுவையறிந்த பின்னர், இலக்கணத்தெளிவுடன் தமிழை கரைத்து குடித்தார். தமிழில் டிக்சனரி குறை இருப்பதை களைய, சதுரகராதி என்ற (டிக்சனரியை) உருவாக்கினார். தமிழின் ஆன்மீக சுவையை வெளியே சொல்லு வதற்காக, திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை லத்தீன் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து உரையும் எழுதினார். அன்றைய நாட்களில் தமிழ் வார்த்தைகளை எழுதும்போது, புள்ளிகள் இருப்பதில்லை. ஆ என்பதை அர என்றும், மா என்பதை மர என்றும் எழுதும் பழக்கங்களை மாற்றி புள்ளிகளையும், ‘ஆ’ வையும், ‘கா’ வையும், கெவையும், கேவையும், இன்னும் பல எழுத்து சீர்திருத்தங்களையும் தமிழில் அறிமுகப்படுத்தி, ‘உரை நடை இலக்கியம்’ என்ற நூலையும் தமிழில் எழுதினார். தேம்பாவணி, பிரபந்தம், காவலூர் கலம்பகம், தொன்னூல், வேதியர் ஒழுக்கம், கித்தேரி அம்மன் அம்மானை, ஞானக் கண்ணாடி போன்ற தனது நூல்களின் மூலம் ஆன்மீக நன்னெறிகளை தமிழருக்கு அறிமுகம் செய்தார். பரமார்த்த குருவின் கதை மற்றும் வாமன் கதை என்னும் நூல்கள் குழந்தைகளுக்காக விஷேஷமாக எழுதப்பட்ட நகைச்சுவயான நூற்கள். என் சிறிய வயதில் என் தந்தை எனக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார், படித்து மகிழ்ந்திருக்கிறேன். தற்போது youtube லும் உள்ளது (https://www.youtube.com/watch?v=w_eYdx9HW6A). இத்தனை ஆழமாக தமிழுக்கு தன்னை அற்பணித்தவருக்கு, தன்பெயரும் தமிழிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பி, வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றினார். பின்னர் 1747 ல் இவர் இயற்கை எய்தினார், இதுவரை நமக்கு தெரிந்ததுதான். அவரின் வரலாறு இன்னமும் முடியவில்லை.

ஏன் தன்னை முனிவர் என்று அழைத்தார் என்ற கேள்வி நமக்கு எழலாம். இத்தனை நூல்களை தமிழில் எழுதிய பின்னரும் ஆசை நிறைவடையாமல், தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை தெளிவுற கற்றுத்தேர்ந்து, மருந்துகளை செய்து, பரிபாஷைகளை கற்று, மக்களுக்கு மருத்துவ பணியும் செய்தார். தான் பயன்படுத்திய மருந்துகளை தொகுத்து, நசகாண்ட வெண்பா, மகாவீரிய சிந்தாமணி, நவரத்தின சுருக்க மாலை, வைத்திய சிகாமணி, சுரமஞ்சரி, தனிமுறைத் திரட்டு, குணவாகடம், நிலக்கண்ணாடி போன்ற சித்த மருத்துவ நூல்களை பாடல்வடிவில் ஓலைசுவடியில் எழுதினார். இப்படி ஒரு சித்தராகவே வாழ்ந்த காரணத்தால், தன்னை வீரமாமுனிவர் என்று அழைக்க விரும்பினார். இந்த நூல்கள் எங்கு இருக்கின்றன, மேலும் நூல்கள் எழுதினாரா, இவருக்கு சித்த மருத்துவ சீடர்கள் இருந்தார்களா, இவர் சித்த மருத்துவ நூல்களை வெளிநாட்டு மொழிகளில் எழுதினாரா போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்கவிலை.

165 ஆண்டுகளாக இவரின் சித்த மருத்துவ சுவடிகள், வைத்தியர்களிடம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரப்பட்டது. சித்தவைத்திய மகானாகிய ஹக்கீம் பா. முஹம்மது அப்துல்லா சாஹிபுவிடம் இந்த ஓலைசுவடிகள் கைக்குக் கிடைத்தவுடன், அவர் 1912 ஆம் ஆண்டு, இவற்றில் சிலவற்றை புத்தகமாக வெளியிட்டார். பல சுவடிகள் மிகவும் சேதாரமாகிவிட்டதால் வெளியிட முடியவில்லை என்றும், இன்னும் வீரமாமுனிவரின் பல சித்தா சுவடிகள் தன் கைகளில் கிடைக்காமல் போனதற்கு வருந்துகிறேன் என்றும் அப்துல்லா சாகிபு புத்தக முன்னுரையில் வருந்துகிறார். இன்று நாம் புற்று நோய்க்கு பயன்படுத்தும் சித்திரமூல குளிகை மற்றும் காந்தரசவில்லை, தோல்நோய்களை போக்கும் பூவரசங்காய் எண்ணெய் என எண்ணற மருந்துகளை வீரமாமுனிவரின் சுவடிகளில் நாம் பார்க்கலாம்.

“வெற்றிலைசுண் ணாம்பபினைச் சமனாகச்சேர்த்து

மேவுகல்வத் திட்டரைத்துத் துவரைபோல

நற்றாமாத் திரைகள் செய்துகொள்வாயொன்று

நாடியவொன் றரையெனுமாத் திரைகள் வீதம்

உற்றசில தினங்களுக்குள் மலப்போக்கெல்லா

மோகோகோ பறந்துவிடுஞ் சிறிதுநில்லா

தற்றிடுநாட் பட்டிருந்த தெனினுமிந்த

வற்புதத்தை யெவரறிவார் பாரின்மீதே”

- வீரமாமுனிவர் வைத்திய சிந்தாமணி

வெத்திலை + சுண்ணாம்பு + அபின் மூன்றையும் சேர்த்து செய்த மாத்திரையால், எத்தனை நாட்பட்ட மலப்போக்கும் சரியாகும் என்கிறார். நவீன மருத்துவத்தில், அபின் (opiods) வகுப்பை சார்ந்த மருந்துகள் irritable bowel syndrome மற்றும் inflammatory bowel syndrome போன்ற குடல் சம்பந்தமான நோய்களின் வயிற்றுப்போக்கை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு நினைவுகூற விழைகிறேன்.

இன்று (நவம்பர் 8 ) வீரமாமுனிவரின் 341 ஆவது பிறந்தநாளில் அவரை நன்றியோடு தமிழ் சமூகம் நினைவுகூருகிறது. சித்த மருத்துவம் உலகபொது மருத்துவம், அதன் வளர்ச்சிக்கு உலகெங்கும் இருந்து சித்தர்கள் பங்களித்துள்ளனர். இந்த தமிழ்துறவி வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டிய சித்தர்கள் வரிசையில் நிற்கிறார்.- அருள் அமுதன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.