குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆசுதிரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது!தனிமனிதர் மட்டுமல்ல அரசுகளும்!!

16.09.2021....அமெரிக்காவுடன் அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் அவுசுதி ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்சு அரசு சாடியுள்ளது.பிரான்சு நாட்டின் நேவல் குழும த்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல வாங்க அவுசுதிரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் நிமித்தமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே பிரான்சு, அவுசுதிரேலியா நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென பிரிட்டனுடன் கைகோர்த்த அவுசுதிரேலியா தனக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பிரான்சு அரசு மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளது.

இது குறித்து பிரான்சு நாட்டு வெளியுறவு அமைச்சர் யீன் யிவெசு லே ட்ரியன் கூறுகையில், “இது முதுகில் குத்தும் செயல். நாங்கள் அவுசுதிரேலியா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் துரோகம் செய்துவிட்டனர். நான் இன்று மிகவும் ஆத்திரத்தோடும், கசப்புணர்வோடும் இருக்கிறேன். நட்பு நாடுகளாக இருப்போர் ஒருவொருக்கொருவர் இத்தகைய செயலை செய்து கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்சுடன் அவுசுதிரேலியா மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் 50 பில்லியன் அவுசுதிரேலியா டொலர் மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.