குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆப்கானிசுதானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? இராணுவம் அஞ்சியது ஏன்?

பி.பி.சி....18.08.2021.... ஆப்கானிசுதானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமை யிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிசுதானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசை ப்படுத்த முடியும்.எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிசுதானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும்.

 

ஆனால் மிக எளிதாக நாட்டின் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் ஒரு குண்டு கூட சுடப்படாமலேயே ஆப்கானிசுதானிய இராணுவம் தாலிபன்களிடம் பணிந்து சென்றிருக்கிறது.

தலைமை, நம்பிக்கை, ஊழல், போர்க்கள அறிவு என பல வகையான அம்சங்களைக் கொண்டுதான் இந்தப் படைகளை ஒப்பிட வேண்டியிருக்கிறது.

ஆப்கானிசுதானின் அனைத்து வகையான படைகளையும் சேர்த்து 3 இலட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள். இது ஆவணங்களில் உள்ள எண்ணிக்கை. உண்மையில் இந்த எண்ணிக்கை குறையலாம். இராணுவம், வி. படை, காவல்துறை ஆகிய பிரிவுகளும் இதில் அடங்குகின்றன.

தாலிபன்களின் உளவுத் திறன்கள்: சந்தேக நபர்களை கண்டறிவது எப்படி?

தாலிபன்கள் யார்? ஆப்கனில் இவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி?

ஆனால் இராணுவத்திலும் காவல்துறையிலும் சேருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இளைஞர்கள் அஞ்சுகிறார்கள். தேவையான ஆள்கள் கிடைக்காமல் ஆப்கானிசுதான் பாதுகாப்புப் படைகள் தவித்திருக்கின்றன.

இதற்குக் காரணம் தாலிபன் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களைக் கண்டு அச்சம்தான். ஆப்கானிசுதானிய ராணுவமும் காவல்துறையும் போர்களில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. பெரும்பாலான மனிதவெடிகுண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டிருக்கின்றன.

தாலிபன் ஆப்கானிசுதான்

இதுமட்டுமல்ல பாதுகாப்புப் படைகளில் "கறுப்பு ஆடுகள்" பிரச்னையும் இருக்கிறது. சீருடைக்குள் இருந்து கொண்டே இராணுவத்தினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்திய பல சம்பவங்கள் ஆப்கானிசுதானில் நடந்திருக்கின்றன.

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் ஆப்கானிசுதான் இராணுவத்தில் உண்டு. இல்லாத வீரர்களின் பெயர்களில் தளபதிகள் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் ஆவணத்தில் இருப்போரின் எண்ணிக்கையும், உண்ணையில் சண்டைக்குச் செல்லும் வீரர்களின் எண்ணிக்கையும் பெருமளவு வேறுபடுகிறது.

ஆப்கன்

படக்குறிப்பு,

சில இடங்களில் ஒரு குண்டு கூட சுடப்படாமலேயே ஆப்கானிசுதானிய இராணுவம் தாலிபன்களிடம் பணிந்து சென்றிருக்கிறது

அதனால் ஏட்டளவில்தான் ஆப்கானிசுதானிய பாதுகாப்புப் படையினர் வலிமையானவர்கள் என்று அமெரிக்காவின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆப்கானிசுதானின் ராணுவத்தில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

தொடர்பே இல்லாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்படுவதால், மன உறுதி தளர்ந்து, சண்டையிடாமல் அப்படியே விட்டுச் செல்லும் போக்கு ஆப்கானிசுதான் ராணுவத்தில் பரவலாக இருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தாலிபன்களின் பலம் என்ன?

தாலிபன் ஆப்கானிசுதான்

ஆப்கானிசுதான் இராணுவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையே கணிக்க இயலாது எனும்போது, தாலிபன் இயக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கணிப்பது சாத்தியமே இல்லாதது.

இருப்பினும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தாலிபன் இயக்கத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் இருப்பதாக கணித்தது. கூடவே பிற பழங்குடி ஆயுதக் குழுக்களையும் சேர்த்தால் மொத்தம் 2 இலட்சம் பேர் வரலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் தாலிபன்களை ஒரே குழுவாக வரையறுப்பது ஆபத்தானது என்று பிரிட்டிச் முன்னாள் இராணுவ அதிகாரி மைக் மார்ட்டின் கூறுகிறார். இவர் பாச்தோ மொழி பேசக் கூடியவர். கெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த சண்டைகள் குறித்து நெருக்கமாகக் கவனித்தவர்.

ஆங்காங்கே இருக்கும் ஓரளவு தொடர்புடைய குழுக்களை தற்காலிகமாக ஒன்று சேர்க்கும் அமைப்பு என்று வேண்டுமானால் தாலிபன்களைக் குறிப்பிடலாம் என்கிறார் அவர்.

அரசுப் படைகளில் இருப்போர் மாத்திமல்ல, ஆயுதக் குழுக்களில் இருப்போரும் தங்களுடைய பிழைப்புக்காக அவ்வப்போது எதிரணிக்குப் போய்விடுவது உண்டு என்பது இங்கு நடக்கும் சண்டையின் மிக முக்கியமான அம்சம்.

இந்த விவரங்களை எல்லாம் ஆய்வு செய்து பார்த்தாலும் கூட ஆப்கானிசுதான் ராணுவம்தான் வலிமையில் முந்தி நிற்க வேண்டும். நிதி, தொழில்நுட்பம், அதிகாரம், ஆயுதம் என அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

காபூல்

பட மூலாதாரம்,

காபூல் விண்ணுந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க வீரர்

ஆப்கானிசுதான் பாதுகாப்புப் படையினரின் சம்பளத்துக்காகவும், ஆயுதங்களுக்காகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக அமெரிக்காவின் ஓர் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தாலிபன்களுக்கு வி. படை எதுவும் கிடையாது. ஆனால் ஆப்கானிசுதான் இராணுவத்துக்கு 200க்கும் மேற்பட்ட விண்ணுந்துகள் இருக்கின்றன. இவை இராணுவத்துக்கு முன்னிலையைத் தந்திருக்க வேண்டும்.

ஆனால் தாலிபன்கள் விமானிகளைக் குறிவைத்து அதிகமான தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால் விமானிகள் கிடைக்காமல் ஆப்கானிசுதான் விமானப்படை திண்டாடியது.

ஆகவேதான் தாலிபன்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சில பகுதிகளில் அமெரிக்க விமானப் படை சென்று உதவி செய்ய நேரிட்டது.

தாலிபன்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்னென்ன?

தலிபான்கள் பெரும்பாலும் போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து வருவாயை நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து ஆதரவு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஆயினும் தாலிபன்களிடம் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ஆப்கானிசுதான் மற்றும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்டவைதான். தற்போது தாலிபன்களிடம் இருக்கும் கம்வீ எனப்படும் இராணுவ வாகனம் இப்படிக் கிடைத்ததுதான்.

இதே போல இயந்திரத் துப்பாக்கிகள், இருளில் காணப் பயன்படும் உபகரணங்கள், பீரங்கிகள், எறிகணைகள் என பல வகையான ஆயுதங்களை இராணுவத்திடம் இருந்தே தாலிபன்கள் பெற்றிருக்கிறார்கள்.

கடைசி சில வாரங்களில் ஏராளமான ஆயுதங்களையும் உபகரணங்களையும் போட்டுவிட்டு ஆப்கானிசுதான் இராணுவ வீரர்கள் ஓடிவிட்டார்கள். சண்டைபோடுகிறீர்களா சரணடைகிறீர்களா என்று கேட்டபோது, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவதையே ஆப்கானிசுதானிய வீரர்கள் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

அப்படிக் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தும் இப்போது தாலிபன்களிடம் இருக்கின்றன. அவர்களுக்கு விமானங்கள் கிடைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

தாலிபன்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

தாலிபன்களிடம் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ஆப்கானிசுதான் மற்றும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்டவை


மிக விரைவாக அவர்களுக்கு ஆயுதங்களும் உபகரணங்களும் கிடைத்ததால்தான் அவர்களால் எதிர்பாராத வேகத்தில் காபூலைக் கைப்பற்ற முடிந்தது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.


ஆப்கானிசுதான் இராணுவத்தைக் கட்டமைக்கவும், மேம்படுத்தவும் அமெரிக்கா செலவு செய்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயும் உண்மையில் இப்போது தாலிபன்களுக்கு பயன்படுகிறது.


மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அவர்களது உத்தி அஞ்சத்தக்கது. காடு, மலை, பள்ளத்தாக்கு என அனைத்து வகையான பரப்புகளையும் தாலிபன்கள் அறிந்து வைத்திருப்பது இராணுவத்துக்கு இல்லாத கூடுதல் பலம்.