குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய 'புதிர்' கண்டுபிடிப்பு..செவ்வாயில் இருந்து வந்த

மின்னஞ்சல்! 14.08.2021....விஞ்ஞானிகள் குழப்பம்..  பால்வெளி விண்மீன் மண்டலம் முழுவதும் ஒரு நம்ப முடி யாத பாரிய வாயு இழையை விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் பெரியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுவரை இந்த மிகப்பெரிய வாயு இழைகளை யாரும் கண்டுபிடிக்க வில்லை என்பதே விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குப் பேரும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கிறது.

விஞ்ஞா னிகளுக்கே இது நம்புவது கடினமாக இருக்கிறது. பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய புதிர் விண்வெளி வாயுவின் இந்த பாரிய வாயு இழைகள் மிகவும் திகைப்பூட்டும் வகையில் பெரியதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் என்ன பார்க்கிறார்கள் என்று கூட அவர்களால் யூகிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். உண்மையில் விஞ்ஞானிகள் இதை நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தில் கண்டது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். என்று அழைக்கப்படும் அடையாளம் கண்டுபிடிக்கப்படாதவாயு இழை விஞ்ஞானிகளால் இன்னும் சரியாக அடையாளம் கண்டுபிடிக்கப்படாத இந்த வாயு இலைகளை என்னவென்று அடையாளம் காண முயன்று வருகின்றனர். ஒருபுறம், சயின்ஸ் அலெர்ட்டின் படி இது "கட்டைல் (Cattail)" என்று அழைக்கப்படும் அடையாளம் கண்டுபிடிக்கப்படாத சில இழை கட்டமைப்பாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், கட்டைல் பால்வெளியின் சுழல் கரங்களில் ஒரு பகுதியாக இருப்பது சமமான சாத்தியம் என்று கூறப்பட்டுள்ளது.

 

செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்..

இதோ.. 2021, 02.08."செவ்வாய் கிரகத்திலிருந்து உங்களுக்கு மெயில் வந்துள்ளது" என்று ரெட் பிளானட் படங்களுடன் நாசா பகிர்ந்த தலைப்பின் முதல் வரியைப் படித்ததும் அனைவரும் ஒரு வினாடி வியந்திருப்பீர்கள். உங்கள் வியப்பை அதிகப்படுத்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தற்பொழுது செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, இணையதளத்தை வியக்க வைத்துள்ளது. இனம் புரியாத ஆர்வத்தைத் தூண்டி வரும் செவ்வாய் கிரகம் சூரியனில் இருந்து நான்காவது கிரகமான செவ்வாய் கிரகம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எப்போதும் ஒரு இனம் புரியாத ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டி வருகிறது. செவ்வாய் கிரகம் பற்றிப் பல ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளின் அறிவியல் ஆய்வுகள் பூமியில் உள்ள மக்களுக்கு சிவப்பு கிரகத்தைப் பற்றி மேலும் அறிய உதவி வருகிறது. பல்வேறு விண்வெளி ஏஜென்சிகளின் சமூக ஊடக கையாளுதல்கள் மூலம் மக்கள் இது தொடர்பான தகவலை அரிய எளிமையாக உள்ளது.  செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மெயில் இதனால், ஒவ்வொரு முறையும், செவ்வாய் கிரகத்தின் வியக்கவைக்கும் படங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாசா ட்வீட் செய்ததைப் போலவே, இது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டரால் கைப்பற்றப்பட்ட ரெட் கிரகத்தின் புதிய படங்களை நாசா சமூக வளைத்ததில் வெளியிட்டுள்ளது. அதுவும், 'செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்களுக்கு மெயில் வந்துள்ளது' என்ற வாக்கியத்துடன் இது பதிவிடப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.! நாசா பதிவிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டது என்ன? "செவ்வாய் கிரகத்திலிருந்து உங்களுக்கு மெயில் வந்துள்ளது" என்று படங்களுடன் பகிர்ந்த தலைப்பின் முதல் வரியைப் பதிவு படிக்கிறது. "எங்கள் @NASAJPL செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டர் சமீபத்தில் சிவப்பு கிரகத்தின் பல்வேறு அம்சங்களைக் காட்டும் புதிய படங்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளது, அதை ஆராய லெப்ட் ஸ்வைப் செய்யவும்,"என்று இடுகை மேலும் கூறுகிறது. ஒவ்வொரு படமும் என்ன காட்டுகிறது என்பதைப் பகிர்வு விவரிக்கிறது. ஜீஜி பள்ளத்திற்குள் அடுக்கு பாறை உருவம் நாசா பதிவிட்ட இந்த பதிவு ஒரு நாளுக்கு முன்பு பகிரப்பட்டுள்ளது, இந்த இடுகை 9.8 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களைச் சேகரித்துள்ளது மற்றும் எண்கள் விரைவாக அதிகரித்து வருகின்றன. மக்கள் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்த அனைத்து வகையான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்த பதிவில் உள்ள முதல் படம் செவ்வாய் கிரகத்தின் ஜீஜி பள்ளத்திற்குள் அடுக்கு பாறை உருவாக்கத்தை அதன் பட்டைகள் மற்றும் படிக்கட்டுகள் போன்ற அடுக்குகளாக அரித்துச் சென்றிருப்பதைக் காட்டுகிறது. உங்கள் மனதில் தோன்றும் கருது என்ன? வடக்கு வசந்த காலத்தில் ஒரு தனித்துவமான துருவ குன்று பகுதியில் எடுக்கப்பட்ட படம் இது, இந்த புகைப்படமும் சில சுவாரஸ்யமான வடிவங்களை வெளிப்படுத்துகிறது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனிக்கட்டிகள் பரவுகின்றன கட்சியை மூன்றாம் புகைப்படம் காட்டுகிறது.

பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய புதிர்

விண்வெளி வாயுவின் இந்த பாரிய வாயு இழைகள் மிகவும் திகைப்பூட்டும் வகையில் பெரியதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் என்ன பார்க்கிறார்கள் என்று கூட அவர்களால் யூகிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். உண்மையில் விஞ்ஞானிகள் இதை நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தில் கண்டது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். "கட்டைல் (Cattail)" என்று அழைக்கப்படும் அடையாளம் கண்டுபிடிக்கப்படாதவாயு இழை விஞ்ஞானிகளால் இன்னும் சரியாக அடையாளம் கண்டுபிடிக்கப்படாத இந்த வாயு இலைகளை என்னவென்று அடையாளம் காண முயன்று வருகின்றனர். ஒருபுறம், சயின்ஸ் அலெர்ட்டின் படி இது "கட்டைல் (Cattail)" என்று அழைக்கப்படும் அடையாளம் கண்டுபிடிக்கப்படாத சில இழை கட்டமைப்பாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், கட்டைல் பால்வெளியின் சுழல் கரங்களில் ஒரு பகுதியாக இருப்பது சமமான சாத்தியம் என்று கூறப்பட்டுள்ளது.