குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

உலகசாதனைப்பெண்மணி 2021 விருது! பின்னுாட்ட பேராழி விருது கொடுத்து முடிசூட்டிய சுவிற்சர்லாந்து பேர்ண்

பேர்ண் வள்ளுவன் பாடசாலை ! 11.விடை.தி.ஆ 2052...24.05.கி.ஆ 2021 உலகசாதனைப்பெண்மணி 2021 விருதுகள் 2, பின்னுாட்ட பேராழி விருது 1, திருமறைச்செம்மல் விருது 1, திருநெறிச்செம்மல் விருது ஆகிய  ஐந்து விருதுகளை உலகசாதனை நிறைவுவெற்றிவிழாவில்  அறிவித்து உலகசாதனை நிகழ்விற்கு முடிசூட்டிய சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை! அதற்கு சிறப்புச் செய்த கனடாத்தமிழாழி தொலைக்காட்சி!! மனிதம் விதைப்போம் புலனக்குழுவும், பெண்ணே உன்பிடிக்குள் உலகு என்ற அமைப்பும் நிகழ்த்திய தமிழால் உலக சாதனை, முத்தமிழும்  அரங்கேறியது உலகத்தமிழ் இணைந்தது.

மதிப்பிற்குரிய தமிழ்த்துறைப்பேராசிரியர்  அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லுாரி, விழுப்புரம்,தமிழ்நாடு. இளமுனைவர்பட்டம் தங்கப்பதக்கம் வென்றவர், முனை வர் பட்டத்தினை புதுவைப்பல்கலைக்கழகத்தில் மறை ந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கைகளால்  பெற்ற பெருமைக்குரியவர் மதிப்பிற்குரிய திரு.உரு. அசோகன் ஐயா அவர்கள். அவர் 1000 இற்கும் மேற்பட்ட கவியரங்குகளைச்சந்தித்துள்ளார், அதில் பலகவியரங் குகளின் தலைவராகவும் திகழந்த     பெருமைக்கரிய வர், 300 அதிகமான பட்டிமன்றங்களில் திகழந்துள்ளார், நடுவராகவும் பலவற்றில் செயற்பட்டுள்ளார்,பற்பல பட்டங்களைப் பெற்றுள்ளார், விருதுகள் பன்னிரண்டிற் குமேல் இத்தனை சிறப்புகளுக் குரிய பெரும்பண்பாளர், கல்வியாளர் அவர்களுக்கு  சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை உலகசாதனை வெற்றி நிகழ்வில் பின்னுாட்ட பேராழி விருது  வழங்கி மதிப்ளித்து  சிறப்பு ச்செய்து சிறப்பு  பெறுகின்றது.   இதற்கு மூலகரணமா னவர்கள்  இரண்டு உலகசாதனை பெண்மணிகள். சாதனைப்பெண்மணி 2021 விருது  முனைவர்  இணை யர் ரீனாஇரவி  அவர்களு க்கும் சுவிசு.பேர்ண். வள்ளு வன். பாடசாலை விருது வழங்கி மதிப்பளித்து. அதே போன்று இணையர் யோதி மீனாட்சி அம்மா அவர்களு க்கும் சாதனைப்பெண்மணி 2021 விருது வழங்கி சிறப் புச்செய்து அழகு செய்தது.


இந்த உலகசாதனையில்  அதிகாலையில் திருமுறைகள் பாடல்கள்பாடி இறை எண்ணம் கொண்டிருந்த இக்குழு மத்தில் மூத்தவர்கள் பெரியவர்களுக்கு வாழும்போது  வாழ்த்துவோம் என்ற  எண்ணத்தோடு  திருமறைச் செம்மல்  விருது  மதிப்பிற் குரிய ஐயா சோமசுந்தரம் அவர்களுக்கும், திருநெறிச் செம்மல்  என்ற விருது மதிப்பிற்குரிய ஞானசேகரம் ஐயா அவர் களுக்கும்  நிறைவுநாளான வெற்றிவிழா வேளையில் 06.விடை .தி.2052 (19.05.2021) அன்று  இந்த விருதுகளை வழங்கி உலகசாதனை நிகழ்விற்கு  சுவிற் சர்லாந்திலிருந்து  பேர்ண் வள்ளுவன் பாடசாலை  முடி சூட்டியது. இந்த  உலகசாதனை நிகழ்வானது 05.05.2021 ஆரம்பித்து தொடர்ச்சியாக 19.05.2021 வரை நிகழ்ந்தமை குறிப்பிடத் தக்கது.அதனைக்கண்ணுற்ற   கனடாத்தமிழாழி தொலைக்காட்சி நிறுவனர் திரு.க.உயிரவன் அவர்கள்  தமது தொலைக் காட்சி அரங்கத்தில் இவர் களுக்கு  சிறப்பு செய்யப் போவதாக  அறிவித்தார். அதற்கமை வாக  உலகசாத னைப் பெண்மணிகளும் , குழுமத் தினரும் இதற்காக செயற்பட்டவர்கள் உறுதுணை வழங்கியவர்களில்  சிலருக்கு  இன்று விருதுகளை வழங்கிச்சிறப் புச்செய்தமையும், இ்த்தமிழ் ப்பணியில்  தொடர்ந்து பணியாற்ற தம்முடன் பயணிப் பவர்களு க்கு  தமிழால் மதிப்பளிப்பது தமது கடமையென அறிவித்தமை அருமை. புதுவை ,தமிழகம் கனடா ,சுவிற்சர்லாந்து மக்ளுக்கும்  இளைய தமிழ்மாணவிக ளுக்கும் விருதுகள் வழங்கியமை தமிழிற்காக எதிர் காலப்பணிகள் தொடரும் என்பது உறுதியானது.


77 விருதுகளையும் 250 இற்கு மேற்பட்ட சான்றிதழ் களை யும்  பெற்றிருக்கக்கூடிய பெருமை்குரிய தஞ்சை சேனாஊர் எம. யீ.ஆர் மருத்துவக்கல்லுாரி மணவனும், கனடாத் தொலைக்காட்சியின் தமிழகம் ,புதுவையின் இணைப்பாளர், மிகுந்த தமிழப்பற்றாளனமாகிய திரு. த.தினேச் அவர்கள் சிறப்பான நன்றியுரையொன்றினை கனடாத்தமிழாழி தொலைக்காட்சி சார்பாகவழங்கி யிருந்தார்  10.விடை. தி.ஆ 2052 .....23.05.  கி.ஆ 2021.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.